<BODY><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9107255\x26blogName\x3d%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thamilsangamam.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thamilsangamam.blogspot.com/\x26vt\x3d-4696126665130882971', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
   
எதிரொலி
எதிரொளி
முன்னைய பதிவுகள்
தொகுப்பு
உங்கள் வரவுகள்

To see all visitor details
நன்றிகள்

Powered by Blogger
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
»--------»

அடுத்தது யார்?
இலங்கைத்தீவில் தொடரப்போகும் அடுத்த ஆறாண்டு நிகழ்ச்சித்திட்டத்தினை சிறிலங்கா அரசதரப்பில் தலைமை ஏற்கப்போவது யார்? சர்வதேச நாடுகளின் ஆதரவையும் இலங்கைத்தீவின் சிறுபான்மை சமூகங்களின் பெருமளவு ஆதரவையும் பெற்ற ரணில் விக்கிரமசிங்கவா? அல்லது இலங்கைத்தீவின் பெரும்பான்மை சமூகத்தின் சாதாரண மற்றும் கடும்போக்கு மக்களின் ஆதரவை கொண்ட மகிந்த ராஜபக்சவா? யார் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கைத்தீவில் அமைதி திரும்பப்போவதில்லை என எண்ணினாலும், ரணில் வந்தால் ஓரளவு சமாதானம் வரும்என்றே தமிழர்கள் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

வெளிப்படையாக தன்னால் செய்யச்கூடியதையே சொல்லக்கூடிய தலைவர் ரணில்தான். எனவே அவர் சொல்வதில் நம்பிக்கை வைக்கமுடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசும் இலங்கை முஸ்லிம் காங்கிரசும் தெரிவிக்கின்றன. தமிழர்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியம் விடுதலைப்புலிகளுக்கு இல்லை. ஆனால் தமிழர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ரணிலுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஏனென்றால் இரண்டு தலைவர்களையும் நம்பமுடியாது என்ற கட்டத்திலும் சமாதானத்துக்கான வாக்களிப்பாக, சிங்களதேசத்துக்கு கொடுக்கப்படும் இன்னுமொரு சந்தர்ப்பமாக அது கருதப்படும்.



ஆனால் சிங்கள தேசத்தின் கடும்போக்காளர்கள் என்ன செய்கிறார்கள்? இலங்கைத்தீவை சிங்கள பௌத்தநாடாக்க வேண்டும் என்றும் கொழும்பு நகரத்தில் மட்டும் 1000 புத்தர்சிலைகளை நிறுவவேண்டும் என்றும் தமிழர்களுடன் அதிகாரப்பங்கீடு கூடாது என்றும் கூறும் சிங்கள பௌத்த பிக்குகள் இவர்களையும் இன்று மகிந்த ராஜபக்சவின் பிரச்சாரகூட்டத்திற்கு அழைத்து செல்கிறார்கள்.

3 Comments:

  • எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

    இலங்கை தனியார் ஊடகம் ஓன்று எஸ்எம்எஸ் இன் ஊடாக நடாத்திய கருத்துக்கணிப்பின் இறுதியான தகவலின்படி 62% வீதமான ஆதரவை ரணில் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(சக்தி இணையம்)

    16.10.2005 அன்று 3.00 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Saturday, October 15, 2005 10:05:00 PM  



  • எழுதிக்கொள்வது: Rayagaran

    என்றும் எந்தன் இன்பத் தமிழினமே!
    எழுச்சி கொண்டே நீபுறப் படுவாய்!
    இன்றுவரை ஈழத்தில் எம்மினம் ஆற்றுகின்ற
    ஏற்றமிகு புரட்சிதனை எண்ணிப் பார்த்திடுவாய்!
    தென்றலாள் தமிழன்னை தரணியிலே தலைநிமிர
    தேன்தமிழ் மக்கள் திக்கெலாம் கூடிநின்று
    ஒன்றிணைந்து ஒரேகுரலில் உறுதிமொழி எடுத்தே
    உலகே வியந்திட அலையெனத் திரண்டார்!
    காலையிற் கண்விழித்துக் கைத்தொலை பேசியில்
    கடல்கடந்த விடயங்கள் கலந்துரை யாடியே
    நாலுவேளை நாவினுக்கு நல்சுவை விருந்தொடு
    நளினமா யுடையணிந்து தளர்நடை பயின்று
    சாலையோரம் மகிழுந்தில் சற்றே பவனிவந்து
    சந்திகளிற் கூடிநின்று தர்க்கம் புரியும்நாம்
    காலநேரம் கருதியெம் கவனத்தைத் திசைதிருப்பிக்
    கண்மணியாம் திருநாட்டில் செலுத்த விழைந்திடுவோம்!
    ஏடுகளைப் புரட்டிப்பார் எழில்மிகு காட்சிகள்
    இணையிலா எம்மினத்தின் எழில்மிகு தோற்றங்கள்
    கூடியே திரண்டுளார் குவலயத்தில் யார்க்குமிலா
    குணம்படைத் தோரிவர் குன்றேறி நின்றோர்பார்!
    பேடொன்று முட்டைதனை இட்டவுடன் தானங்கு
    பெரிதாகக் குரலிட்டு கூவுதல் போல்நாமும்
    சாடையாய்ச் சிறுதொகை தாமிங்கு வழங்கிச்
    சாதித்தோம் என்றே சாற்றுதல்தான் நன்றோ?
    தமிழன்னை சிறைமீட்கத் தன்னுயிர் நீத்த
    தன்னிகரில் திலீபனின் தூய திங்களிது!
    உமிழ்நீர் வற்றியே உலர்ந்து உலகறிய
    உயிர்நீத்த அளப்பரிய கொடைதனை அறிவாயே!
    தமக்கென வாழாத் தமிழுக்காய் நாட்டிற்காய்த்
    தம்முயி ரைத்தற் கொடையாய்த் தானீந்தும்
    எமக்காய் இவ்வுலக இன்பங்கள் துறந்த
    எண்ணிலா மாவீரர் தீரர்கள் எத்தனைபேர்?
    பொங்குதமிழ் நிகழ்ச்சிதனிற் பூங்காவிற் கூடினோம்
    பொய்க்கவில்லை தம்பிபார்த் தீபன் புகன்றவுரை!
    எங்குமுள்ள தமிழரெலாம் ஒன்றிணைந்து கூவுகின்றாh
    எதிரியின் முகத்திரை அழித்திட முனைகின்றார்!
    கங்குலது கழிந்திட வேண்டுமெனச் சீறியே
    கடல்கடந்த நாட்டினிலும் நம்தமிழன் கூடுகின்றான்
    சங்கமித்துச் சாடுகின்றான் சிங்களத்தின் சீரற்ற
    செயல்களைத் தேசங்கள் தாமறிந் திடவே!
    செந்தமிழர் நாட்டினிலே சேனையென ஒன்றிணைந்தார்
    சேதிதா னறிவாயோ துணைப்படை யெழுச்சி!
    பைந்தமிழர் பயில்கின்றார் பகைதனை விரட்டவே
    பாசறை புகுந்திடப் பண்புசால் பெண்களும்
    வந்தோரை வரவேற்கும் வண்டமிழ் ஈழத்தில்
    வளமான மண்ணதிலே வானம திர்ந்திட
    முந்தி விழுந்து முதியோரும் இளையோரும்
    மூச்சாய்ப் பயிற்சிதனில் முனைந்து நிற்கின்றார்!
    யாழ்நகரில் நேற்றிருந்த பொங்குதமிழ் அறிவாயா?
    யாப்புறுத்தி முழங்கினார்! யாதுமே செய்யிலாக்
    காழ்ப்புடன் சிங்களம் கலங்குதல் காண்பாயவர்
    கைகட்டி வாய்பொத்தும் காலம் தூரமில்லை!.
    சூழ்ச்சிதான் புரிந்தார் சூதினாலவர் தொலைந்தார்
    சூரியத் தலைவனின் சுடரினிற் சாய்வார்!
    தாழ்ச்சியுமவர்க் கேயன்றித் தமிழனுக் கல்லவே
    தங்கத் தமிழன்னை தவவலிமை அறிவாயே!
    ஆதலின் புறப்படுவாய் அன்புடைத் தமிழா!
    அன்னிய நாடுகளின் அறியாமை நீக்கிடவே
    ஈதலில் ஒப்பிலா எம்தலைவன் உள்ளவரை
    எம்மினம் அஞ்சாது இம்மியும் அசையாது
    மோதலில், வென்றவர்நாம் மூத்த இனமெனவும்
    முன்மொழிந்து நிற்போம். முட்டுக்கள் நீக்கெனச்
    சாதலிலும் இறுதியாய்த் தமிழீழமே மூச்செனச்
    சாற்றியே அவர்பால் சத்தியம் செய்வோம்!
    ஐப்பசித் திங்களிது அளவான குளிர்காலம்
    ஐ.நா சபைக்கோர் அன்பான வேண்டுகோள்
    கைப்பட எழுதிநாம் கடுகியே அனுப்புவோம்!
    காரணம் தடைக் கெதுவெனக் கேட்போம்!
    எப்பகையும் எமக்கில்லை எவருக்கும் தீயரில்லை
    உட்பகை தாம்புரிந்த உண்மைதனைப் புரியாது
    தப்பாக எம்மீது சாற்றிடும் பொய்யுரையைத்
    தகர்த்திடக் கூடுவோம் பூங்காவிற் பேசுவோம்!
    பி.இரயாகரன்


    15.10.2005 அன்று 19.15 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Sunday, October 16, 2005 5:16:00 AM  



  • எழுதிக்கொள்வது: Hameed Abdullah

    அடுத்து ரனில் வரவேண்டும் என்பதே அமைதியை விரும்பும் சிங்களர்களின் விருப்பமாகவும் உள்ளது!

    21.10.2005 அன்று 17.05 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Friday, October 21, 2005 10:19:00 PM  



Post a Comment

<< Home