<BODY><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9107255\x26blogName\x3d%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thamilsangamam.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thamilsangamam.blogspot.com/\x26vt\x3d-4696126665130882971', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
   
பதிவு பற்றி

விடுதலைக்காக குருதி சொட்டும் தமிழர்களின் உணர்வுகளை சொல்லும் ஒருவனின் பதிவும் பகிர்வும்.
  thamillvaanan@gmail.com
 
எதிரொலி
எதிரொளி
முன்னைய பதிவுகள்
தொகுப்பு
மாததொகுப்பு
உங்கள் வரவுகள்

To see all visitor details
நன்றிகள்

Powered by Blogger
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

தமிழம் - புதிய எழுத்துரு
தமிழுக்கு ஏன் புதிய எழுத்துருதேவை என்பது சம்பந்தமாக நாம் அனைவரும் சிந்திக்கவேண்டும். இதற்காகவே பலரைப்போல கதைத்து கதைத்து காலத்தை இழுத்தடிக்காமல் தமிழம் என்ற பெயரில் புதிய எழுத்துரு ஒன்றை பரிசோதனை முயற்சியாக அறிமுகப்படுத்துவது என்ற முயற்சியில் அதனை திருவள்ளுவர் தமிழ் எழுதி யுடன் அறிமுகப்படுத்தினேன்.

குறிப்பிட்ட எழுத்துருமாற்றம் சம்பந்தமாக பல அறிஞர்கள் பலதடவைகளில் கூறியிருக்கிறார்கள். இது விடயமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எப்படியோ பல்வேறு சாட்டுகளை முன்வைத்து ஒருமுகமாக இழுத்தடித்து வருகிறார்கள்.

இன்று பெரும்பான்மையாக ஒவ்வொரு மாநிலத்தவரும் வெவ்வேறு எழுத்துரு தட்டெழுதும் முறை பயன்படுத்துகிறார்கள்.

புதிய எழுத்துரு எவற்றை கொண்டிருக்கவேண்டும்.

1. பழகிகொள்ள இலகுவாக இருக்கவேண்டும்.
2. தற்போதைய நிலையில் ஆங்கில கீபோட்டில் ஆங்கில எழுத்துருவுக்கான 26 கீகளே மட்டும் அதிக பட்சம் பயன்படுத்தவேண்டும்.
3. தற்போதுள்ள யுனிக்கோட்டு எழுத்துருவுக்கு ஏற்றவாறும்
அது இருக்க வேண்டும்.

இந்த 03 அடிப்படைவிடயங்களை மட்டுமே எடுத்து பாருங்கள். இவற்றை பூர்த்திசெய்யகூடியவாறு ஏதாவது எழுத்துரு இருக்கிறதா?
எனக்கு தெரிந்தளவில் ரிஸ்கி எனப்படும் எழுத்துரு மட்டும் 26 கீகளை மட்டும் பயன்படுத்துகிறது.
ஆனால் அது ஒலிநய அடிப்படையில் எனகூறப்பட்டாலும் அதனை கற்றுக்கொள்வது புதியவர்களுககு இலகுவானதல்ல.

ஆனால் ஏதாவது எழுத்துருவில் பழகியவர்கள் புதிய எழுத்துருவுக்கு பழக்கப்படுவதென்பது எதிர்பார்க்ககூடியவிடயமல்ல. ஆனால் புதியவர்களுக்கு பயன்படககூடியவாறும் இலகுவாகவும் புதிய எழுத்துரு வேண்டும்.
நான் இங்கு தமிழம் எழுத்துருவுக்கான இடங்களை தீர்மானித்ததில் மாற்றங்கள் செய்யலாம். ஆனால் பொருத்தமான தொரு கட்டமைப்பை உருவாக்கவேண்டும்.
இது பற்றிய ஆராய்ச்சிகட்டுரை ஒன்றை பலரின் வேண்டுகோளுக்கு இணங்க தயாரித்து வருகிறேன். இதற்காக பலரின் கருத்துகளை திரட்டிவருகிறேன். உங்களது கருத்துக்களையும் அறிவியுங்கள் அல்லது அறிய தாருங்கள்.

என்றும் அனபுடன்
தமிழ்வாணன்.
திருவள்ளுவர் தமிழ் எழுதி
புதிய தமிழ் எழுதி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்ட எந்த எழுத்துருவை பயன்படுத்தினாலும் எந்த வேறுபாடும் இன்றி தட்டெழுத முடியும். திருவள்ளுவர் தமிழ் எழுதி எனப்படும் இந்த எழுத்தோலையை பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய தமிழ் எழுத்துரு ஒன்றும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இன்று எல்லோரும் ஆங்கில் எழுத்துருவுக்கு வடிவமைக்கபட்ட கீபோட்டை பயன்படுத்துகிறோம். ஆனால் தமிழ்எழுத்துருவுக்கு மாற்றுவதற்கான எழுத்துருக்களை அனைத்து இடங்களிலும் ( எல்லா கீகளிலும்) பயன்படுத்துவதால் எமக்கு தேவையான அத்தியாவசிய குறியீடுகளை இடுவதற்கு மீண்டும் ஆங்கில எழுத்துருவுக்கு மாற்றியே அதனை செய்கிறோம்.


ஆனால் வேறு எந்த குறியீடுகளையும் பயன்படுத்தாமல் ஆங்கில எழுத்துருக்கள் உள்ள 26 கீகளை மட்டும் பயன்படுத்தி (அதிலும் மீதமாக 08 இடங்கள் உள்ளன.) இப்புதிய எழுத்துரு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால் தனியாக புதிய எழுத்துருவை நீங்கள் தரவிறக்கதேவையில்லை. உங்கள் கணனியில் இருக்கின்ற லதா எழுத்துருவை பயன்படுத்தியே இதனை தட்டெழுதமுடியும்.

திருவள்ளுவர் தமிழ் எழுதி பற்றியும் தமிழம் எழுத்துரு பற்றியும் உங்கள் கருத்துக்களை அறியதாருங்கள். தற்போது இவ் எழுதியை யாரும் பயன்படுத்தவேண்டாம். அனைவரின் கருத்துக்களை அறிந்து சரிபிழைகளை மிகவிரைவில் திருத்தம் செய்து அனைவரும் பயன்படுத்தக்கூடிய எளிய செயல் நிரலை விரைவில் தருகிறேன்.

இது தொடர்பாக தொடர்ந்தும் முயற்சி செய்துவருபவரும் வழிகாட்டியுமான சுரதா அண்ணா அவர்களின் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன். அத்துடன் பல உதவிகளை செய்த கோபி அண்ணா அவர்களின் கருத்தும் அறிய ஆவலாக உள்ளேன்.


திருவள்ளுவர் தமிழ் எழுதிக்கு செல்ல
சந்திரிகாவை வீட்டுக்கு அனுப்புதல்
கடந்த வாரம் வெளியான சண்டேலீடரில் வெளிவந்த நேர்காணலை ஒட்டிய பதிவாக இப்பத்தி அமைகிறது. முன்னர் சந்திரிகா அரசில் மிக முக்கியமானவராக இருந்த எஸ்பி திசாநாயக்காவே சில தகவல்களை வெளியிட்டிருந்தார். வரலாறு பல பாடங்களை தந்து இருக்கிறது. வீட்டுக்கு அனுப்பப்பட்ட பின்னர் ஞானோபதேசம் பெற்ற முன்னாள் தமிழ்பொலிஸ்மா அதிபரை கடந்த பத்தி ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். எஸ்பி திசாநாயக்கா, ஜிஎல். பீரிஸ் ஆகியோர் இன்று சந்திரிகா அரசில் இருப்பவர்களை விட உயர்நிலை அந்தஸ்தில் இருந்தவர்கள். சந்திரிகாவின் தீவிர விசுவாசிகளாக இருந்த இவர்கள் ஏன் ஐதேகட்சிக்கு மாறினார்கள் என்பதற்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய தேவை தமிழர்களுக்கு இல்லை. ஆனால் சந்திரிகா எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொள்வதற்கு இது சில வேளை பயன்படக்கூடும்.

அவர் அந்த நேர்காணலின்போது சந்திரிகாவின் அசட்டுத்தனமான போக்குபற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். "சந்திரிகா தனக்காக 03 சார்க் நாட்டுத்தலைவர்களை 27 நிமிடங்கள் காத்திருக்க வைத்திருக்கிறார். சுனாமிக்கு பின்னர் கூட முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஸ் உம் பில் கிளின்டனும் சந்திரிகாவின் வருகைக்காக 45 நிமிடங்கள் காத்திருந்திருக்கிறார்கள்."

பழைய நினைவுகளை நினைவு கூர்ந்த அவர் ஒரு ஆய்வுப்புத்தகம் ஒன்றை வெளியிடப்போவதாக குறிப்பிட்டார். " நான் இப்புத்தகத்துக்காக பல விடயங்களை தயார்படுத்திவருகிறேன். நான் குறிப்பிட்ட பலரிடம் சில கேள்விகளை அனுப்பி அவர்களின் பதிலை பெற்றுக்கொண்டிருக்கிறேன். இப்புத்தகம் சந்திரிகாவைப்பற்றி மட்டும் சொல்லவில்லை. பண்டாரநாயக்கா குடும்பத்தை அதன் வரலாறை இப்புத்தகம் வெளிக்கொண்டுவரும். எஸ்டபிள்யுஆர்டி பண்டாரநாயக்க 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் கொண்டுவந்தார். ஆனால் பண்டாரநாயக்க குடும்பம் உண்மையில் தமிழ்க்குடும்பம். அவர்கள் பலவற்றை செய்து தங்களது பெயர்களை மாற்றினார்கள். "

சந்திரிகாவின் அரசியல் வரவுக்கு தோள் கொடுத்த பலரில் சிலர் காணாமல் போயிருக்கிறார்கள். சிலர் கட்சி மாறிப்போனார்கள். இந்தப்பட்டியல் எனது நினைவுக்கு எட்டியவரை வசந்தராஜா வில் தொடங்கி இப்போது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதற்குள்ளும் சிலர் இப்போதும் சந்திரிகாவுடன் தொடர்ந்து இருந்து சாதனை படைக்காதவர்களும் இல்லாமலில்லை. அவர்கள் வேறு யாருமல்ல. டக்ளசும் லக்ஸ்மன் கதிர்காமரும் தான். அவர்கள் தங்கள் வாழ்நாள் மட்டும் சந்திரிகாவுடன் இருப்பார்கள் என்பதில் எவருக்கும் சந்தேகம் வர வாய்ப்பில்லை.

தற்போது சந்திரிகாவுக்கும் ஜேவிபிக்கும் இடையில் பனிப்போர் தொடங்கிவிட்டது. இதனை மேற்கத்தைய அணுகுமுறையிலோ அல்லது புதுவிதமான முறையிலோ சுமூக நிலைக்கு கொண்டுவருவதென்பது சந்திரிகாவின் கடந்த கால அரசியலையும் ஜேவிபியின் நிகழ்கால அரசியலை நன்கு அறிந்தவரகள் புரிந்து வைத்திருப்பார்கள். ஒன்று மட்டும் உறுதியானது. சந்திரிகா இருக்கும்வரை ஜேவிபியும் நினைத்தபாட்டுக்கு ஆடமுடியாது. ஆனால் இரண்டு இக்கட்சிகளும் இணைந்திருக்காமலும் ஐதேகட்சிக்கு முகம்கொடுக்கமுடியாது. இதற்கு இப்போது ஜேவிபிக்குள்ள ஒரேவழி சந்திரிகாவை வீட்டுக்கு அனுப்புவதே.

முடிவு பெரும்பாலும் எடுக்கப்பட்டிருக்கும். அதனை எவ்வாறு கொண்டுசெல்வது என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.
நான் பிறந்த ஊர்
ஒரு ஓரமாய் அமைந்திருந்த
என்னூரைப்பற்றி
இப்போதும் பச்சையாய் ஞாபகங்கள்
எட்டு வயது மட்டுமே பழக்கம்
அதன்பின் ஐந்தோடு பத்தாக
அலைந்தோம் ஒவ்வொன்றாய்
தொலைந்தோம்.

சின்னவயதில்
சிறகடித்த எம்மூரில்
செல்லாக்காசாய்
ஓடிச்செல் என வானிருந்து
கட்டளை
துண்டுகள்சொல்லியது.

ஆனைக்கொய்யாவும்
கறுத்தகொழும்பான் மாம்பழமும்
இப்போதும் என்வீட்டில் இருப்பதாய்
இப்போதும் உணர்கிறேன்.
எல்லையில் இருந்திருந்தால்
இப்போது எதிர்பார்க்கலாம்
இப்படித்தான் நடக்கும் என்று.
ஆனால்
எங்களுர் இரண்டிற்கு
இடையிலே இருந்ததால் தான்
எல்லாமே நடந்தது.

முரளி பழம் இவ்வூரின் முகவரி
5 வருடத்துக்கு ஒருமுறைதான்
பூக்கும் காய்க்கும்.
அப்போதும் அப்படித்தான்
பூத்து புல்லரித்து
எல்லாமே ஒருநொடியில்
எங்களுக்கு மட்டும்
ஏன் இப்படி?

தமிழர்கள் என்பதாலா?
வெள்ளைப்புலியே வெளியேறு
என்ன நடக்கிறது ? எல்லாமே முரணுக்குள் முரண். சாமாதானத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இப்போது விஸ்வருபம் எடுத்து எங்கே சென்று முடியபோகிறது என்பதில் எல்லோருக்கும் பயம் கலந்த எதிர்பார்ப்பு. இந்தியா என்றும் அமெரிக்கா என்றும் மாறி மாறி திட்டிக்கொண்டிருந்த ஜேவிபியினர் ( இங்கு ஜேவிபி என்பது தனியே ஒரு கட்சி என்று கருதாமல் சிங்கள கடும்போக்குவாத கூட்டுகள் என்பதே பொருத்தம். சுருக்கமாக அவ்வாறான நிலைப்பாட்டை கொண்டவர்களுக்கு அந்தப்பெயர் இந்ந ஆண்டோடு சிறப்புப்பெயராகிவிடும் )

இப்போது நோர்வேயை திட்டி தற்போது உதவி வழங்கும் நிறுவனங்கள் மீது அதனது பார்வை திரும்பியுள்ளது. உலகவங்கியின் இலங்கை வதிவிட பரதிநிதி பீற்றர் கெரால்ட் தற்போது இப்பேரினவாதிகளினால் கடும் அவமதிப்புக்குள்ளாகியுள்ளார். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின்போது அவரது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அவரை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றவேண்டும் என கோரியும் பல்வேறு சுலோக அட்டைகளை தாங்கியவாறு ஜேவிபி பிரசாரசெயலாளர் விமல்வீரவன்ச வின் வழிகாட்டலில் பல சிங்கள "தேசாபிமான பிக்குகளும்" கலந்து கொண்டனர்.


குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தின்போது அவரது உருவம் போன்று வடிவமைக்கப்பட்ட பொம்மை எரிபூட்டப்படுவதை படத்தில்காணலாம்.இவ்வாறு ஜேவிபிக்கு கடுப்பேற அவர் என்னதான் செய்தார்?

ஆறாம்திகதிய சண்டேரைம்ஸ் இதழில் நேர்காணலின்போது "நான் பல தடவைகள் சில ஊடகங்களாலும் தேசாபிமான பற்றுள்ள அமைப்பினராலும் "எரியூட்டப்பட்டு" இருக்கிறேன். அதற்கான காரணம் என்னவென்றால், உத்தியோகபூர்மற்ற ஓருமாதிரியான தனிமாநிலமாக, ஒரு அதிகாரபூர்வமான விடுதலைப்புலிகளுடைய கட்டுப்பாட்டு பிரதேசம் இருக்கிறது என்ற அடிப்படையிலும், அரசாங்கத்துடன் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை செய்துகொண்ட ஒரு அமைப்பு என்ற ரீதியில் அவர்களும் சட்டரீதியான ஒரு பங்காளிகள் என்ற அடிப்படையிலும் விடுதலைப்புலிகளுடானான எமது தொடர்புகள் பொருத்தமற்றது" என அவர்கள் நினைக்கிறார்கள்.

இதற்கு முன்னரும் ஒரு தடவை இவ்வாறு இவரது உருவபொம்மை எரிக்கப்பட்டதுதெரிந்ததே அப்போது அவர் பிபிஸிக்கு அளித்த பேட்டியில்; "என்னுடைய பொம்மையை உண்மையில் அழகாக செய்திருந்தார்கள்" என்றார்.


(கொடும்பாவி எரித்தல் என சொல்வது ஆனால் இது சரியா பிழையா என்ற குழப்பத்தில் உருவபொம்மையென குறிப்பிட்டுள்ளேன்.)
கருணா என்ற புனைபெயரில்
அண்மைக்காலமாக கிழக்கில் ஒரு நிழல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அனைவரும் கண்டுகொள்ளலாம். கருணாவின் அப்புறப்படுத்தலுடன் முடிவுக்கு வந்து ஓரளவு அமைதியடைந்திருந்த கிழக்கு மாகாணம் மீண்டும் இரத்தம் சொட்டத்தொடங்கியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்னர் அப்பகுதியைச் சேர்ந்த இராணுவப்பொறுப்பதிகாரி ஒருவர் கருணாவின் கை ஓங்கிவருவதாகவும் இதனாலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுவருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். எப்படி இருக்கிறது கதை?

இதன் தொடர்கதை எப்போதோ திட்டமிடப்பட்டுவிட்டபோதும் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருப்பதன் நோக்கமென்ன? கருணா என்ற புனைபெயரில் விடுதலைப்பொராட்டத்துக்கு எதிரான சக்திகளின் தொடர்புடன் மீண்டும் சிறிலங்கா இரகசிய இராணுவப்பிரிவின் செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டதன் காரணம் என்ன?

ஒரு நாள் ஒரு கும்பல் புலிகள் மீது தாக்குதல் மேற்கொள்வதும் அதனை இராணுவமும் பொலிசாரும் சேர்ந்து மறுநாள் ஓரிருவரை கைது செய்து விடுவது போலவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் காட்சிகள் நகர்ந்து செல்வதை இத்திரைப்படம் மூலம் காணக்கூடியதாக உள்ளது. பார்வையாளர்கள் அனைவரும் வில்லனே கதாநாயகனாகும் நிலைகண்டு குழம்பிபோய் உண்மையில் கருணாவின் கூலிகள் தான் இதனை செய்கிறார்கள்.என நிலை தடுமாறி நிற்கும் நிலை.

அததுகிரிய என்ற பகுதியில் செயற்பட்டு வந்த இரகசிய இராணுவ பிரிவு பற்றி நீங்கள் முன்பு அறிந்திருப்பீர்கள். இவ்வணி ஏனைய எந்த இராணுவப்பிரிவுகளோடும் இணைந்து செயற்படாமல் இரகசியமாக இராணுவதளபதிக்கு கீழ் நேரடியாக முப்படைகளின் தளபதியான சந்திரிகாவின் ஆசியுடன் செயற்ப்பட்டு வந்ததையும் பின்னர் அது பற்றி ரணிலின் ஆட்சிக்காலத்தின்போது வெளிப்படுத்தப்பட்டதையும் மீண்டும் நினைவுக்கு கொண்டுவருவது இப்போது பொருத்தமாக இருக்கும்.

விடுதலைப்புலிகளால் தமிழ் முஸ்லிம் உறவுகள் சீர்செய்யப்பட்டு புரிந்துணர்வான் சூழ்நிலையொன்று கட்டியமைக்கப்பட்ட நேரத்தில் அப்போதைய தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண அரசியல்துறை பொறுப்பாளர் கொல்லபட்டார். இதனைத்தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றன. தற்போது மூவினங்களை சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். இவையெல்லாம் தற்செயலான சம்பவங்கள் அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்.

யுத்தம் திரைமறைவில் கருணா என்ற புனைபெயரில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. நாம் இன்னும் கண்ணை மூடிக்கொண்டிருக்கப்போகிறோமா?
தமிழ்ப்பொலிஸ்மா அதிபர் கவலைக்கிடம்!

காலம் கடந்த ஞானோதயம் பலருக்கு ஏற்பட்டுவருவதை இலங்கை வரலாற்றுப் போக்கில் பலரையும் காணலாம். அண்மையில் இந்த வரிசையில் இணைந்து கொண்டவர் வேறு யாரும் அல்ல. முன்னாள் சிறிலங்கா பொலிஸ்மா அதிபர் ஆனந்தராஜாதான். இவர் இவ்வாறு பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டபோது அரச ஆதரவு சக்திகள் "பார்த்தீர்களா இலங்கை ஜனநாயக நாடு". அது சிறுபான்மை இனத்தைச்சேர்ந்தவர் ஒருவரையே பொலிஸ்மா அதிபராக நியமித்துள்ளது என்றெல்லாம் தங்களுடைய வால்பிடி அரசியலுக்கு வக்காலத்து வாங்கியதை பெரும்பாலானோர் மறந்திருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன்.தற்போது அப்போதைய பொலிஸ்மா அதிபர் சொல்வதை அவருடைய வார்த்தைகளிலே கேளுங்கள்.


" அரசமைப்புக் கவுன்ஸிலில் முக்கியமானவர்கள் மூவர் இருக்கின்றனர். அதன்தலைவர் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார, அடுத்தவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, மற்றவர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க. இவர்களைவிட ஏனைய ஏழு உறுப்பினர் களும் எவ்வாறு அரசியல் கட்சிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.இவர்கள் அனைவரும் எனது வரலாறு, எனது செயற்பாடுகள், சேவை மூப்பு, எனது பின்னணி என அனைத்தையும் ஆராய்ந்த பின்னரே என்னைச் சிபாரிசு செய்தனர். அப்படி அந்தப் பத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்ட என்னை ஜனாதிபதி நிராகரித்திருக்கிறார் என்றால் அதுபற்றிக் கருத்துக்கூற என்னால் இயலவில்லை.அரசியலும், இனவாதமும் எனக்கு எதிராகச் செயற்படும்போது என்னால் எதுவும் செய்ய முடியாது. இலங்கை என்ற நாட்டுக்காகவே நான் சேவையாற்றி இருக்கிறேன். "


"அரசமைப்புக் கவுன்ஸில் வழங்கிய சிபாரிசைத் தனியொருவர் நிராகரித்திருப்பது பற்றி எனக்கு எவ்வித வருத்தமும் கிடையாது. நான் தமிழன் என்ற காரணத்தினாலேயே பொலீஸ் தலைமைப் பதவியில் நீடிப்பு வழங்கப்படாமல் வீட்டுக்கு அனுப்பப்பட்டேன்". இவ்வாறு கூறுகிறார் கடந்த 03ம்திகதி லஞ்ச ஆணைக்குழுவின் பிரதிநிதியாக ஏனையோரால் பிரேரிக்கப்பட்டு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் ரி. ஆனந்தராஜா.


இப்படித்தான் உயர்பொறுப்புகளில் இருந்த பலர் தமிழன் என்ற காரணத்தால் வரலாற்றிருந்து மறக்கடிக்கப்பட்டார்கள்.


குறிப்பு:
சிறிலங்கா முதல் இராணுவதளபதியாக இருந்தவர் பொன் முத்துக்குமார் என்பவர். இவரைப்பற்றி யாரும் அறிந்திருக்கிறீர்களா?

சிறிலங்கா விமானப்படையை கட்டியெழுப்புவதற்காக அப்போதைய ஜனாதிபதியான ஜேஆர் அவர்களால் சிங்கப்பூரிலிருந்து தமிழ் விமான கப்டன் ஒருவர்வரவழைக்கப்பட்டிருந்தார். இவரைப்பற்றியாவது யாராவது அறிந்திருக்கிறீர்களா?


யாழ்தளத்தில் இவ்விடயம் சம்பந்தமான கருத்துப்பகிர்வுகள்
அடுத்த ஐநா தூதுவர்
சிறிலங்கா அரசு ஐநாவுக்கான அடுத்த செயலாளராக தங்களது பிரதிநிதியை நியமிப்பதற்கான அரசியல் இராசதந்திர செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையாகவே சிறிலங்கா அரசுத்தரப்பு சமாதான செயலாளராக ஜயந்த தனபாலா குறிப்பிட்ட பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். இவ்விடயம் சம்பந்தமாக தமிழ்செய்தி ஊடகங்கள் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என நான் கருதுகிறேன்.

தற்போதைய யுத்தமற்ற சூழ்நிலையை பயன்படுத்தியும் தற்போதைய ஜயந்த தனபாலாவின் சமாதான பணிகளை சுட்டிக்காட்டியும் தமது பிரதிநிதி ஐநா செயலாளராக உருவாக்கிவிடவேண்டுமென்பதில் சிறிலங்கா அரசு மறைமுகமாகவும் நேரடியாகவும் பல செயற்பாடுகளை முடக்கிவிட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இவ்விடயமாக உரிய கவனத்தை தமிழர் தரப்புகள் முன்னெடுக்காவிட்டால் சிறிலங்காவின் அரசாண்மைக்கு ஒரு அங்கீகாரத்தை வழங்கிவிடும். இலங்கைத்தீவில் சிறுபான்மை இனங்கள் அதன் பெரும்பான்மை இனத்தால் அடக்கப்படுவது நியாயமாக்கப்படும். எனவே தமிழ் தரப்புகள் உரிய கவனம் செலுத்தி சிறிலங்கா அரசின் பிரதிநிதியை ஐநாசபை பிரதிநிதியாக்கப்படுவதை தடுப்பதற்கான காத்திரமான நடவடிக்ககைகளை உடனடியாகவே எடுக்கப்படவேண்டும்.

தற்போது ஐநா செயலாளராகவிருக்கும் கொபிஅனானின் பதவிக்காலம் டிசம்பர்2006 உடன் முடிவடைகிறது.


யாழ்தளத்தில் இவ்விடயம் சம்பந்தமான கருத்துப்பகிர்வுகள்
சின்னச்சிட்டு
இவள் வேறு யாருமல்ல
சிங்களப்பேய்களின் வேகத்தில்
அழிக்கப்பட்ட சின்னச்சிட்டு.
விபத்துக்கள் வழமைதான்
ஆனால் எண்ணிக்கொள்ளுங்கள்
எத்தனைமொட்டுக்கள்
இழக்கப்பட்டப்பட்டது
இந்த வல்லூறுகளின் வேகத்தால்.

எத்தனை பேரை இடித்துக் கொன்றாய்.
தட்டிக்கேட்டது தவறென சொல்லி
சுட்டாயாம்.
காலுக்கு கீழேதான் சுட்டோம்
எனக்கதைவேறு.
எத்தனை திமிர் உனக்கு.


(கடந்த 03ம் திகதி யாழ்ப்பாணத்தில் வேம்படி மகளிர் கல்லூரி தரம் - 7 மாணவி துசிகா சிறிலங்கா இராணுவ வாகனத்தால் மோதிக் கொல்லப்பட்டார். இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை இவ்வாறு பலர் கொல்லப்பட்டுள்ளார்கள்.)


யாழ்தளத்தில் இவ்விடயம் சம்பந்தமான கருத்துப்பகிர்வுகள்
இலங்கை இலங்குமா?

இலங்கையின் அரசியலில் தற்போது செல்வாக்கு செலுத்தும் ஜேவிபியின் நிலைப்பாடு பற்றி அக்கட்சியின் பிரமுகர் விமல் வீரவன்சவின் கருத்துக்கள் காலத்தின் தேவைகருதி இங்கு ஆவணப்படுத்தப்படுகிறது.



விடுதலைப் புலிகளை விட பயங்கரமானவர்கள் இலங்கையில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்கள், கடன் வழங்கும் சர்வதேச ஸ்தாபனங்களும் இவர்கள் தான் இன்று. புலிகளுக்கு ராஜதந்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுப்பதற்காக எமது ராஜ்யத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என ஜே.வி.பி. யின் பாரளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்ற சாட்டுகிறார். தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் மாநாடு கடந்த புதன்கிழமை கொழும்பு விஹாரமகாதேவி வெளியரங்கில் இடம்பெற்ற போது அங்கு பேசிய போதே எம்.பி.யும் இவ்வியக்கத்தின் இணைத் தலைவருமான விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.



1815 ஆம் ஆண்டில் கண்டி ராஜதானியை காட்டிக் கொடுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்ட போது தான் ஹிக்கடுவை ஷ்ரீ சுமங்கல தேரர் பிரிட்டிஷ் தேசியக் கொடியை இறக்கி சிங்கக் கொடியை ஏற்றினார். இது போன்ற வீரம் எமக்குத் தேவை.யுத்தத்தின் மூலம் ஆக்கிரமிக்க முடியாத கண்டி இராஜதானியை அன்று வெள்ளைக்காரன் தந்திரத்தால் ஆக்கிரமித்தான். அதற்காக ஜோன் டொய்லியை வெள்ளைக்காரன் பயன்படுத்தினான்.இந்த ஜோன் டொய்லி சிங்கள மக்களுடன் நெருங்கிப் பழகினார். வெற்றிலை போட்டார். மகாநாயக்க தேரர்களை வணங்கினான். ஷ்ரீ விக்கிரம ராஜசிங்கவுக்கு மது அருந்தக் கொடுத்தார். இது போல நெருங்கிப் பழகித்தான் கழுத்தறுக்கப்பட்டது. அதே நிலைமை இன்று தோன்றியுள்ளது.



எரிக் சொல்ஹெய்ம் இன்று மகா நாயக்க தேரர்களை சந்தித்து வணங்குகிறார். சிங்கள பிரதேசங்களுக்கு விஜயம் செய்கிறார். இதெல்லாம் அன்பல்ல, நஞ்சு. நோர்வே மற்றும் சர்வதேச நாடுகளின் நோக்கம் எமது இராஜ்யத்தை பலவீனமாக்குவதே ஆகும்.1505 ஆம் ஆண்டில் கடல் கொந்தளிப்பினால் போர்த்துக்கேயரான லோரன்சோ டி அல்மேதா இலங்கையை வந்தடைந்தார். இன்று கடல்கோளுக்குப் பின்னர் உதவி வழங்கும் போர்வையில் எமது நாட்டை அடிபணியச் செய்ய பலர் வந்துள்ளனர். அன்று கண்டி இராஜதானியை ஆக்கிரமித்தது போல் யுத்தத்தால் அல்ல உதவி செய்யும் போர்வையில் நாட்டில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கி, இனங்கள் மத்தியில் முரண்பாடுகளை உருவாக்கி பலமற்ற நாடாக எமது நாட்டை வெளிக்காட்டி அடிமைப்படுத்துவதே சர்வதேசத்தின் நோக்கம்.இதற்காகத் தான் புலிகளே மறந்து போயுள்ள இடைக்கால நிர்வாக சபை யோசனை, தமிழ் ஈழத்தை எல்லாம் இவர்கள் ஞாபகப்படுத்துகிறார்கள்.கடல்கோளுக்கு பின்னர் இலங்கை வந்த ஐ.நா. செயலாளர் கொபி அனான், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளான பில் கிளின்டன், புஷ் மற்றும் ஸ்கென்டி நேவிய நாட்டு, நோர்வே நாட்டு பிரதிநிதிகள் அனைவரும் வீடு செல்லும் போது புலிகளுடன் தேசிய இணக்கப்பட்டை ஏற்படுத்திக் கொள்ளுமாறு கூறிவிட்டே செல்கிறார்கள்.



அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தடைசெய்த, ராஜீவ் காந்தியை கொலை செய்த உலக பயங்கரவாத பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகளுடன் தேசிய இணக்கப்பாட்டுடன் செயற்படுமாறு கோருவது ஜனநாயகமாகுமா? புஷ்-பின்லேடன் இணைந்து செயற்படுமாறு இவர்கள் கோருவார்களா புஷ் தான் அதை ஏற்பாரா?.எமது நாட்டிலுள்ள ஐ.நா. பிரதிநிதிகள் கௌசல்யனின் கொலைக்கு கண்டனம் தெரிவிப்பதோடு இதனால் யுத்தம் மூளும் என்றும் தெரிவிக்கின்றனர். இவர்கள் யார் எமது நாட்டில் யுத்தம் வருமென ஆரூடம் கூறுவதற்கு? இந்த சர்வதேச சூழ்ச்சிக்காரர்கள் ரணில் விக்கிரமசிங்கவை பயன்படுத்தி டொலர்களை வழங்கி தமிழ் ஈழத்தை ஏற்படுத்தப் பார்த்தனர். அதுவும் இத்திட்டம் 2005 இலே நிறைவேற்றப்பட விருந்தது. தமிழ் ஈழக் குழந்தை 2005 இல் பிறந்திருக்கும். ஆனால் எம்மால் அது தடுக்கப்பட்டு விட்டது.



பிரசவிக்க முடியாத தமிழ் ஈழத்தை `சீசர்' செய்தாவது வெளியில் எடுப்பதற்கு தான் இன்று அனைத்து வழிகளிலும் சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் முயன்று வருகின்றன.
புலிகளும் தமிழ்ச்செல்வனும் மறந்துவிட்ட தமிழ் ஈழத்தை சர்வதேசம் தான் நினைவுபடுத்திக் கொண்டுள்ளதோடு ராஜதந்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுக்கவும் முயற்சிக்கின்றது. அதற்காகத்தான் நிவாரணப் பணிகளை அரசாங்கம் - புலிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற அழுத்தத்தை கொடுக்கிறது.யுத்த நிறுத்த உடன்படிக்கையால் யுத்தம் நிறுத்தப்பட்டது வரவேற்கிறோம். ஆனால் புலிகள் பிரதேசம், இராணுவப் பிரதேசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதையே எதிர்க்கிறோம். உண்மையில் அது மீட்கப்பட்ட பகுதி, மீட்கப்படாத பகுதி என்றிருக்க வேண்டும். விரைவில் மீட்கப்படாத பகுதிகளும் மீட்கப்பட்டுவிடும்.அத்தோடு, புலிகளுக்கு மேஜர், ஜெனரல், கோப்ரல் என பதவிப் பெயர்களை நமது ஊடகங்களும் பாவிக்கின்றன. விசேடமாக ஆங்கில ஊடகங்கள் இதனைச் செய்கின்றனன.இங்கு வந்த ஐ.நா.செயலாளரை எவ்வாறாவது கிளிநொச்சிக்கு வரவழைக்க புலிகள் பலமுறை முயற்சித்தனர். நாம் அதனை தடுத்து விட்டோம். ஐ.தே.கட்சி ஆட்சியிலிருந்திருந்தால் போயிருப்பார். எமது அரசாங்கத்திலும் கிளிநொச்சிக்கு போகும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறையவில்லை. ஆனால் கட்டுப்படுத்தியிருக்கிறோம்.



இதெல்லாம் எதற்காக, மெது மெதுவாக இராஜதந்திர அந்தஸ்தை புலிகள் பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுத் தர எடுக்கப்படும் முயற்சிகளே ஆகும்.கடல்கோள் வந்து 5-6 நாட்களாக புலிகள் காணாமல் போயிருந்தனர். பின்னர் தான் வெளியே வந்தார்கள். அரசு ஒட்சிசன் கொடுத்தது. இந்த லட்சணத்தில் தான் அரசாங்கம் எந்த உதவியையும் வடபகுதிக்கு செய்யவில்லையென்று குற்றம் சுமத்துகின்றனர்.இங்குள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO)க்கள் நிவாரண நிதியத்தை சரிபார்க்க சர்வதேச கணக்காய்வாளர்கள் தேவை என்கிறார்கள். அரசாங்கத்தின் செயற்பாடுகளை கேள்வி கேட்க அவர்கள் யார்?



உண்மையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தான் அதனை மில்லியன் கணக்கில் பண மோசடிகளில் ஈடுபட்டு வருமானத்தை சம்பாதிக்கின்றார்கள். மக்களுக்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையிலேயே மோசடிகளை செய்து வருகின்றனர்.பேர்க் பவுண்டேசன் என்ற அமைப்பில் ஒரு பிரதியமைச்சரும் இணைந்து செயற்படுகிறார். புலித்தேவனின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் இவர்கள் தான் மாற்றுக் கொள்கை எனக் கூறப்படும் புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் பத்திரிகைக்கும் நிதி கொடுத்தவர்கள். மோதல் தவிர்ப்பு, சமாதானம் இசைந்து போதல் என்ற பெயர்களில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கருத்தரங்குகளை நடத்தும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ன செய்கின்றன. அமைச்சர்கள், ஊடகவியலாளர்களை பணம் கொடுத்து வாங்கி, வெளிநாட்டு பயணங்களுக்கு ஏற்பாடு செய்து கொக்டேயில் வைத்து கோடிக்கணக்கான ரூபாக்களை செலவழிக்கின்றது. எதற்காக நாட்டை பிரிக்க மனச்சாட்சியை விற்று சம்பாதிக்கின்றார்கள்.



இந்த அரச சார்பற்ற நிறுவனக்காரர்களுடன் இணைந்து செயற்படும் இலங்கையர்களுக்கு மனச்சாட்சியோ, தான் ஒரு இலங்கையன் என்ற எண்ணமோ கிடையாது, இருப்பது ஒன்று தான் பணத்தை கொள்ளையடிப்பது நாட்டைக் காட்டிக் கொடுப்பது.ஒருவர் இருக்கிறார் தேர்தல்களில் வன்முறை தடுப்பு என்ற பெயரில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனத்தில். இவர்கள் பெயரளவில் தான் இலங்கையர்கள். பணம் கோடிக் கணக்காக குவிந்துள்ளது. இவர்தான் இலங்கைக்கு நிதி கொடுக்க வேண்டாம் என்று சர்வதேசத்திற்கு தெரிவித்தவர். அரச தரப்பு உறுப்பினர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்து வழங்கி அதற்கு மேலும் வழங்கி பிரிவினைக்காக மூளைச் சலவை செய்பவர். கண்டி ராஜ்யத்தை காட்டிக் கொடுத்த ஜோன் டொய்யிலியின் வேலையை அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்து வருகின்றன. அதற்காகத் தான் இலங்கையை பலவீனமடைந்த ராஜ்யம் என்பதை நிரூபிக்க அனைத்த வழிகளிலும் துரோகத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் பணத்திற்காக எதையும் செய்பவர்கள்.



பௌத்த ராஜ்யத்தை அழித்தொழித்துவிட்டு தமிழ் கிறிஸ்தவ தமிழ் ஈழத்தை உருவாக்கவே சர்வதேசமும், அரச சார்பற்ற நிறுவனங்களும் தமது நிகழ்ச்சி நிரலை இங்கு செயற்படுத்தி வருகின்றன. நான் இலங்கையிலுள்ள கிறிஸ்தவர்களைக் குறிப்பிடவில்லை. சூடானிலும் உட்புகுந்த நோர்வே அங்கும் சிலுவைப் போரை தொடக்கி வைத்து நாட்டை பிரித்து சின்னா பின்னமாக்கியது.



அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதியை பெருமளவில் கிளிநொச்சிக்குத் தான் அனுப்புகிறார்கள், அரசாங்கத்திற்கு கொடுப்பதில்லை ஏன்? கிளிநொச்சிக்கு கொடுத்தால் கணக்கறிக்கையொன்றும் வெளியிடத் தோவையில்லை. இதன் மூலம் தான் பணத்தை சுருட்டலாம். அரசுக்கு வழங்கினால் கணக்கு காட்ட வேண்டுமே, சுருட்ட முடியாது. புலிகளின் தமிழர் புனர்வாழ்வுக்கழக அமைப்பு இன்று பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கிய வாகனங்களாகும். இதன் மூலம் ஆயுதங்களும் புலிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.



ஒரு சில வெள்ளைக்காரர்களை இவர்கள் வரவழைத்து ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கருத்தரங்குகளை வைக்கிறார்கள். நமது ஊடகவியலாளர்களும் அங்கு போகிறார்கள். வெள்ளைக்காரன் என்ன சொல்கிறான் அது தான் பொன்மொழியென்று அப்படியே எழுதுகிறான். அவனது சுய அறிவையே அடகு வைத்துவிடுகிறான். இலங்கையில் எல்லைக் கிராமங்கள் என்று ஒன்றில்லை. கடல்கோளால் அழிந்த பிரதேசங்கள் தான் எமது எல்லைக் கிராமங்களாகும். இது போன்ற கருத்தரங்குகளுக்கு சென்று அநுராதபுரத்தில் எல்லைக் கிராமங்கள் என எழுதுகிறார்கள். வெள்ளைக்காரன் சொல்வதைக் கேட்டு சமாதி அடைந்து விடுகிறார்கள். சுய புத்தியை பயன்படுத்துவதில்லை.


அம்பாறை - மட்டக்களப்பு வேலை பார்த்த கௌசல்யனுக்கு கிழக்கு மாகாண பொறுப்பாளர் என பதவி கொடுத்தவர்களும் ஊடகவியலாளர்கள் தான். ஏன் திருகோணமலை கிழக்கு மாகாணத்துடன் இல்லையா? ஏன் இதனை யோசிப்பதில்லை.
நாம் அரசுக்குள் இருக்கலாம் - வெளியில் இருக்கலாம். ஆனால், ராஜ்யத்தை பலமிழந்து விட இடமளிக்கக் கூடாது. பலத்தை பாதுகாக்க வேண்டும். புலிகளை விட பயங்கரமானவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள், கடன் வழங்கும் அமைப்புகள்.
இவர்கள் இன்று சிங்களவர்கள் மத்தியிலும் பிரிவினையை உருவாக்கி சூழ்ச்சித் திட்டத்தை மேற்கொள்கின்றனர். கத்தோலிக்க சிங்களவர்கள் - பௌத்த சிங்களவர்கள் என்ற பிரிவினையை ஏற்படுத்தி மோதல்களை உருவாக்கத் திட்டம் தீட்டி வருகின்றனர். இந்த வலையில் சிக்கி விடக்கூடாது.



இத்தருணத்தில் சிங்கள -பௌத்த சமூகத்திற்கு பாரிய பொறுப்பு உள்ளது. நாட்டை பாதுகாப்பதும் அழிப்பதும் இவர்கள் கையில் தான் உள்ளது. சிலுவைப் போருக்கோ அல்லது முஸ்லிம்களுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளாது ஞானத்தை பயன்படுத்தி செயற்பட வேண்டும். அனைத்து இனங்கள் மத்தியிலும் இலங்கையன் என்ற எண்ணம் மேழௌ வேண்டும். கட்சி பேதங்களை ஒதுக்கித் தள்ளி ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் எமது ராஜ்யத்தை பலமுள்ளதாக்கலாம். இல்லாவிட்டால் சூழ்ச்சிக்காரர்கள் நமது நாட்டை பலவீனப்படுத்தி பிரிவினையை ஏற்படுத்தி தமிழ் ஈழத்தை பெற்றுக் கொடுத்து விடுவார்கள். இதற்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.



பிரிவினைவாத புலிகளுக்கு இராஜதந்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுக்க சர்வதேசமும், அரச சார்பற்ற நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் மேற்கொண்டுவரும் திட்டத்தை தோல்வியடையச் செய்ய ஒன்றுபடுவோம் என்றும் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.



நன்றி - தினக்குரல்
சிறுவர்களா இவர்கள் இல்லை குழந்தைகள்
இன்றைய இலங்கை அரசியல் சூழ்நிலையைஇழிநிலைக்கு கொண்டுவந்ததில் பெரும்பங்காற்றிய சிங்கள பௌத்த சித்தாந்தங்களையும் அதனை தொடர்ந்தும் நிலைநிறுத்த செயற்பட்டுக் கொண்டிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் கடும்போக்குகளையும் கருத்தில்கொண்டு சில விடயங்களை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாக இருந்தபோதும் நேற்றய தமிழ்நெற் செய்தியில் வெளிவந்த சில ஒளிப்படங்களே இப்பத்தியை எழுத தூண்டியது.

இளம் சிங்களசிறார்கள் மதம், போதனை என்றபெயரில் ஏன் இவ்வாறு இனவாத மதவாத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றார்கள்? ஒரு சமூகத்துக்கு நெறியை போதிக்க வேண்டிய மதம் ஏனிந்த இழிநிலைக்கு சென்றது? வீடுகளில் தாய் தந்தை சகோதரர்களுடன் வாழவேண்டிய சிறுவர்கள் ஏன் இவ்வாறு மஞ்சள் காவியுடைகளுக்குள் உள்நுழைக்கப்பட்டார்கள்? 18 வயது அடைவதற்கு ஒருமாதம் இருந்தாலே சிறுவர் என்றும் சிறுவர்படையினர் என்றும் கூச்சலிடும் இந்த உலகம் இந்த பத்து வயதினரை பார்க்காமல் கண்ணை மூடுவதேன்?

கடந்த இரண்டாம் திகதி சிறிலங்காவின் தேசாபிமான இயக்கம் என அழைக்கப்படும் அமைப்பால் நடாத்தப்பட்ட பெரியளவிலான பேரணியில் பங்குபற்றிக்கொண்டிருக்கும் “ எதிர்கால பௌத்தபோதகர்களையே” இங்கு காண்கிறீர்கள்.



இவ்வாறு சிறுவர்களை மதம் என்ற பெயரில் சூனியமான வாழ்வியலுக்குள் இட்டுச்செல்வது குறிப்பிட்ட சமூகத்தின் வளர்ச்சிப்போக்கற்ற நிலையையே எடுத்துக்காட்டுகின்றது. எந்த மதமானாலும் மதம் என்ற பெயரில் நடாத்தப்படும் சிறுவர் சிறைவாழ்க்கையை உடைப்பதற்கான குரல்கள் எழவேண்டும்.

இந்துமதத்தில் இவ்வாறான குறைபாடுகளை சிறுவர்மட்டத்தில் நான் இதுவரை அறியவில்லை. ஆனால் கிறிஸ்தவமதத்தில் குறிப்பிட்ட மார்க்கத்தை தழுவிய சிறுவர்களை பெரியவர்களாகும் வரை சாதாரண கல்விமுறைக்குள் உள்வாங்கி பின்னர்தான் மதபோதகர்களாக்கும் கல்விநெறிக்குள் உட்படுத்தப்படுவதாக எனது நண்பர் ஒருவர் மூலம் அறிந்தேன்.

அனைத்து மதநடைமுறைகளை நான் அறிந்திராத போதும் பௌத்தமதத்தில் இவ்வாறு சிறுவர்களை – இவர்களை சிறுவர்கள் என சொல்லமுடியாது, குழந்தைகள் என்பதே பொருத்தம் அவர்களது இளமை வாழ்க்கையை சிறைப்படுத்தும் இந்நடைமுறை சரியானதா? இவ்வாறான நடைமுறைகளினுடாக வளர்த்தெடுக்கப்படும் மதபோதகர்கள் சமூகத்துக்கு என்ன வழிகாட்டலை செய்யப்போகின்றார்கள்? அறம் அன்பு போன்ற நல்ல சமூகப்பண்புகளை உருவாக்கவேண்டிய மதம் என்னசெய்யப்போகின்றது. அதற்கான விடையை இப்படம் தெளிவாக எடுத்துக்காட்டும்.



யாழ்தளத்தில் இவ்விடயம் சம்பந்தமான கருத்துப்பகிர்வுகள்
புதிய இந்தியா
இந்தியாவில் அண்மைக்காலங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. தற்போது சுனாமி பேரழிவு நடந்தபோது அது செயற்பட்டவிதம் ஒரு எடுத்துக்காட்டாகும். இதனை எந்தக்கோணத்தில் பார்க்கிறோம் என்பது அவரவர் சார்புநிலையை பொறுத்தது. கீழ்வரும் கட்டுரை நண்பன் ஒருவனால் எனக்கு அனுப்பப்பட்டது. ( தினமணியிலிருந்து)