<BODY><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9107255\x26blogName\x3d%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thamilsangamam.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thamilsangamam.blogspot.com/\x26vt\x3d-4696126665130882971', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
   
பதிவு பற்றி

விடுதலைக்காக குருதி சொட்டும் தமிழர்களின் உணர்வுகளை சொல்லும் ஒருவனின் பதிவும் பகிர்வும்.
  thamillvaanan@gmail.com
 
எதிரொலி
எதிரொளி
முன்னைய பதிவுகள்
தொகுப்பு
மாததொகுப்பு
உங்கள் வரவுகள்

To see all visitor details
நன்றிகள்

Powered by Blogger
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

இலங்கை தீவில் முஸ்லிம்களின் எதிர்காலம்
அண்மைய நாட்களில் தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கிடையில் நல்ல உறவுநிலை ஏற்படக்கூடிய வாய்ப்புநிலைகள் காணப்படுவதாக தெரிகிறது. முஸ்லிம்களின் தலைமைகள் எப்போதுமே தமக்குள் ஒற்றுமைப்படுகிறார்களோ இல்லையோ எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் பதவிகளை பெற்றுக்கொண்டுவிடுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். ஒன்றில் கட்சி தனது கொள்கையை மாற்றி ஆளும் கட்சிக்குள் இணைந்துவிடும் அல்லது கட்சிக்குள் இருப்பவர்கள் ஆளும்கட்சிக்கு மாறிவிடுவார்கள். இதனால்தான் சாதாரண அப்பாவி முஸ்லிம் மக்களும் தமக்கான தலைமையை தீர்மானிக்கமுடியாமல் தடுமாறுகிறார்கள். இதன் எதிர்வினையே முஸ்லிம் தலைமைகள் இப்போதும் முட்டிமோதிக்கொண்டு பலகட்சிகளாக தொங்கிகிடக்கிறார்கள்.

அண்மையில் முஸ்லிம் சமூக தலைவர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் "நாங்கள் பல தவறுகளை விட்டிருக்கிறோம்;. இதனை எவரும் மறுக்கமுடியாது. சிங்கள அரசு எப்போதுமே எங்களை சமமாக சம உரிமை உள்ளவர்களாக கருதபோவதில்லை என்பதை சுனாமி உதவி நடவடிக்கைகள் மூலமும் கண்டு கொள்ளலாம். சுpங்கள அரசுகள் தமிழ் - முஸ்லிம் உறவுகளை சீர்குலைப்பதன் மூலம் தங்களுடைய இலக்கை அடைவதில்தான் குறியாக இருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப்போராட்டம் தமிழ் முஸ்லிம் மக்களுக்கான போராட்டம்." ஏன தெரிவித்திருந்தார்.

அக்கலந்துரையாடலில் உரையாற்றிய ஏ. எல். அப்துல் ஜவாத் - காத்தான்குடி முஸ்லிம் சமமேளனங்களின் செயலாளர் - "நாங்கள் விடுதலைப்புலிகளின் தோழரகள் என்ற வகையில் இக்கலந்துரையாடலுக்கு வந்திருக்கிறோம். நாங்கள் விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகட்டத்தில் பங்குபற்றியிருக்கிறோம். எங்கள் நண்பர்கள் உறவினர்கள் மாணவர்கள் பலரும் தமிழீழவிடுதலை இயக்கங்களில் உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள். பின்னர் இடம்பெற்ற சில கசப்பான சம்பவங்கள் வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் தோற்றுவித்தது. ஆனால் முஸ்லிம்கள் ஒருபோதும் விடுதலைப்போராட்டத்திற்கு துரோகம் செய்யவில்லை என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியும். சிலவேளைகளில் சில தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமான முஸ்லிம்கள் என்றவகையில் ஒருபோதும் அப்படி நடந்திருக்கவில்லை. சிங்கள இனவாதிகள் எங்களை பிரிப்பதற்கு முயற்சி செய்தார்கள். நாங்கள் ஒருபோதும் அவர்களின் பிரித்தாளும் போக்குக்கு உடன்படவில்லை".

"நாங்கள் ஒரு வேண்டுகொளை விடுதலைப்புலிகள் முன் வைக்க விரும்புகிறோம். நீங்கள் ஆயிரக்கணக்கான போராளிகளையும் பொதுமக்களையும் உங்கள் இலக்கை அடைவதற்காக இழந்திருக்கிறீர்கள். அதன்காரணமாக நீங்கள் இப்போராட்டத்தின் மூலம் கிடைக்கப்போகும் பலாபலனில் பங்கு கேட்பதற்கு எந்த அடிப்படையும்; இல்லை. எப்படியிருந்தாலும் எங்களையும் நீங்கள் சம உரிமைஉடையவர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் பல வெற்றிகளை பெற்றுள்ளீர்கள். வரலாற்றில் உங்களுடைய அரசியல் இராணுவவெற்றிகள் பதியப்பட்டிருக்கின்றன. ஆதனைப்போல முஸ்லிம் மக்களுடனும் நீங்கள் தாராள மனதுள்ளவர்கள் என்பதை வரலாற்றில் பதியவைக்கவேண்டுமென விரும்புகிறோம்".

அக்கலந்துரையாடலில் உரையாற்றிய ஐ. எம். இப்ராகிம் - காத்தான்குடி முஸ்லிம் சமமேளனங்களின் தலைவர் - "உல்லை சுனாமியால் முற்றாக அழிக்கப்பட்ட ஒரு கிராமம். அரசாங்கம் எந்த உதவியையும் எம் மக்களுக்கு செய்யவில்லை. ஆனால் சிலரால் 50 அடி புத்தர்சிலையொன்று அப்பகுதியில் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. சிங்களவர்கள் இராணுவத்தின் உதவியுடன் குடியமர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்பகுதி கிராமஅலுவலர் அக்குறிப்பிட்ட சிங்கள மக்களையும் வாக்காளர்களாக பதியுமாறு கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார். இவ்வாறுதான் சிங்கள தலைவர்கள் சுனாமி நிதியை சிங்கள குடியேற்றத்துக்கு பயன்படுத்துகிறார்கள். அம்பாறை கடற்கரையோர கிராமங்கள் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. கொழுப்பிலிருந்து உதவிகள் வந்து சேர ஒருமாதத்திற்கும் மேலாக காத்திருந்தோம். ஆனால் இன்னும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. எங்களுடைய அரசியல்வாதிகள் ஒன்றையும் செய்யவில்லை. நாங்கள் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான் அரசுக்கெதிராக குரல்கொடுக்கும் தமிழ் அரசியல்வாதிகளை போல முஸ்லிம் அரசியல்வாதிகளும் செயற்படவேண்டும் என்பதே. தமிழீழம் ஒருநாள் கிடைக்கப்போகின்றது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த வெற்றி முஸ்லிம் சமூகத்தையும் உள்வாங்கியதாக இருக்கவேண்டும் என்பதே முக்கியமானது" என்றார்.

தமிழ் முஸ்லிம் சமூகங்கள் யதார்த்த நிலையை புரிந்து கொண்டுள்ளதாகவே அண்மைய சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் இவ்வாறான புரிதல்களையும் தெளிதல்களையும் சிங்கள இனவாதம் பார்த்துக் கொண்டிருக்கப்போகிறதா? அண்மையில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் கிழக்கு பிராந்திய அரசியற்துறை பொறுப்பாளரின் கொலை இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
பயணம்-2
"சரி இருக்கட்டும் உங்களுக்கு நல்லகாலம் எண்டா கொண்டுபோவியள்" என சாரதி சொன்னார்.நான் இப்படி இசகு பிசகாக இருக்கும் எண்டு தெரிஞ்சிருந்தா ரிவியையே வாங்காமல் வந்திருப்பன். ஆனால் ஒன்றுமட்டும் விளங்கியது: இப்போது இருக்கும் சமாதானமும் நிரந்தரமானதல்ல.

இப்போது பொருட்கள் சோதனைசெய்யும் இடம். ரிவியை செக் பண்ணியபொலிஸ்காரன் மெதுவாக கேட்டான் "ரிமோட்". பின்னர் அவனே பொக்கற்றுக்குள் போட்டுக்கொண்டு போவென சாடை காட்டினான். உண்மையில் இராணுவத்தினர் செய்கின்ற பிரயோசனமற்ற தடைகளை அவர்களில் சிலர் புரிந்து கொண்டிருப்பது ஓரளவு திருப்தியை கொடுத்தது. வாகன சாரதி திரும்பிவரும்போது சொன்னார் "உவங்களுக்கு எதை தடுக்கவேணும் எதை விடவேணும் எண்டது பிரச்சனை இல்லை. எதையாவது தடுக்கவேணும் எண்டதுதான் பிரச்சனை". ரிவி ரிமோட்டை வைச்சுக்கொண்டுதான் புலிகள் அடிப்பாங்கள் எண்டு இப்பவும் நினைச்சாங்கள் எண்டா இவங்கள் படிக்க இன்னும் நிறைய இருக்கு என சாதாரண பொதுமக்களே யதார்த்தத்தை புரிந்துவைத்திருக்கின்றபோது இராணுவம் அப்படி என்ன முட்டாள்தனமாக இருக்கிறது. நிச்சயமாக அப்படி சொல்லமுடியாது. "உவங்களுக்கு எதை தடுக்கவேணும் எதை விடவேணும் எண்டது பிரச்சனை இல்லை. எதையாவது தடுக்கவேணும் எண்டதுதான் பிரச்சனை". சாரதி சொன்னதில்தான் உண்மை இருப்பதாக பட்டது.

ஓருவாறு சோதனைகளை முடித்துக்கொண்டு இராணுவத்தினரின் சோதனைசாவடியிலிருந்து எல்லைகளை கடக்கின்ற பயணம். இடைப்பட்ட பகுதி பற்றைகளாக இடிந்ந கட்டடங்களாக வெறிச்சோடிய பகுதி. மிதிவெடிகள் பற்றிய எச்சரிக்கைகள். இடைப்பட்ட பகுதி ஒரு கிலோமீற்றர் வரும் இடைவெட்டும் எண்ணங்களோ ஓராயிரம். 20வருட போராட்டம் + 17500 க்கும் மேற்பட்ட போராளிகளின் இழப்பு + 65000 ற்கும் மேற்பட்ட மக்களின் இழப்பு = ??. எல்லா இழப்புக்களுமே அர்த்தமற்றதாகி விட்டதா? இராணுவவேலியால் சூழப்பட்ட வாழ்க்கைதான் முடிவா? விடைகளை தேடியவாறு உள்ளே நுழைய "வணக்கம் அண்ண" யாரோ உடன்பிறந்தவர்கள் கூப்பிட்டது போல உணர்வு.

(இன்னும் வளரும்).
புலிக்கொடி புலிகளின் கொடி அல்ல
புலிக்கொடி புலிகளின் கொடி அல்ல அது தமிழ்த்தேசியத்தின் கொடி. புலிக்கொடியை வைபவங்களில் ஏற்றுவதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு மன்னார் வணக்கத்துக்குரிய ஆயர் யோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் புலிகளின் முக்கிய தளபதி ஒருவர் அண்மையில் கொல்லப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த செவ்வாயன்று நிகழ்ந்த ஆர்ப்பார்ட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆண்டகை அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் " இவ்வானதொரு இழப்புக்கு மத்தியிலும் விடுதலைப்புலிகள் பேணுகின்ற பொறுமையை பாராட்டுகிறேன். மாவீரர் தினத்தின்போது எமது மக்கள் தமது தேசியத்தின்கொடியை ஏற்றியபோது கனரகஆயுதங்களுடன் அனுப்பப்பட்ட இராணுவத்தினரால் பலதடவை தாக்கப்பட்டார்கள்" என்றார்.
பயணம் - 1
நான் புலம்பெயர்ந்து பலவருடங்கள் ஆனபோதும் பலரைப்போலவே தாயகத்துக்கு செல்லவேண்டும் என மனம் உந்தினாலும் அந்தப்பணத்தை மிச்சம்பிடித்தால் வீட்டுக்கு அனுப்பலாம் என எண்ணி எண்ணியே வருடங்கள் 07 ஆகி விட்டபடியால் இம்முறை எப்படியேனும் சென்றுதிரும்பவேண்டும் என்றமுடிவுடன் எனது பயணத்தை கடந்த டிசம்பரில் ஆரம்பித்திருந்தேன். அப்போது கண்ட பார்த்த மனதைநெருடிய விடயங்களை இங்கே பதிவாக்க முயல்கிறேன்.

வவுனியா-ஓமந்தை இராணுவ சோதனை நிலையம். இராணுவ உடையென்றாலே தமிழர்களுக்கு ஏற்படும் பயஉணர்வு என்னையும் விட்டுவைக்கவில்லை. நான் ஒரு வெளிநாட்டுகுடியுரிமை பெற்றவன் என்றமுறையில் எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டாலும் அந்தசோதனைச் சாவடியில் நிற்கும்போது எதிரிகளின் பிரதேசத்தில் நிற்பதுபோன்ற பிரமை. அதிகாலை 0630. அந்தசோதனைச்சாவடியை தாண்டினால் அதிகாலை 0730. இதுவும் ஒரு குறிகாட்டியாக -இரண்டு தேசங்களாக பிளந்துவிட்ட இலங்கையை சுட்டிக்காட்டும். எப்படி இந்த இரண்டு தேசங்களும் ஒட்டப்போகின்றன.

இராணுவத்தினர் இராணுவ பாக்குகளுடன் வீதியினூடாக குழுக்கள் குழுக்களாக ஓடிக்கொண்டிருந்தார்கள். வீதிக்கருகாக உள்ள ஒருமைதானத்தில் இன்னுமொரு தொகுதியினர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள்.ஏனைய பகுதிகளிலிருந்து வடபகுதிசெல்வதற்காக வந்திருந்த ஏராளமான மக்களும் வாகனங்களுமாக நிரம்பிவழியும் இந்த வீதியில் ஏன் இவ்வாறு போர்முனைப்பை காண்பிக்கும்வகையில் பயிற்சி செய்கிறார்கள். மக்களுக்கு பீதியை ஊட்டியவாறு இவ்வாறாதொரு பயிற்சி ஏன்? அப்படியானால் சாமாதானம் எப்போது?எல்லாமே உலகத்தை ஏமாற்றும் நாடகமா? நான் இப்பயணத்தை தவிர்த்திருக்கலாமோ என என்மனம் ஒரு கணம் சிந்தித்தது.

அப்பகுதியெங்கும் இராணுவ பிரசன்னம். ஒருசில பொலிசாரை தவிர அனைத்துமே பச்சையிருள் மூடிக்கிடந்தது. அப்போது எனது வாகனசாரதி சொன்னார் "அண்ணை ரிவி கொண்டுவந்திருக்கிறியள் ரிமோட்டும் கொண்டுவந்தனியளோ?" ஏதோ சிக்கல் இருப்பதை அப்போதுதான் உணர்ந்து கொண்;டேன். (இன்னும் வளரும்)
தமிழா! நீ பேசுவது தமிழா...?
தமிழா! நீ பேசுவது தமிழா...?

காசி ஆனந்தன்
தமிழா!
நீ
பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான்
'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை
'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

பாட்டன் கையில
'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுல
என்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்
தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?