|
பயங்கரவாதி மகிந்த
|
திருகோணமலையில் இம்மாதம் நான்காம் திகதி கொல்லப்பட்ட 17 பிரான்ஸ் தொண்டு அமைப்பின் உறுப்பினர்களின் கொலையை சிறிலங்கா படைகளே செய்துள்ளதாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவும் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது. French charity Action Against Hunger என்ற அமைப்பின் தொண்டர்களே வரிசையாக முழங்காலில் நிற்கவைத்து அவர்களது அலுவலகத்துக்குள்ளே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
சிங்கள இராணுவத்தினரின் இக்கொலையை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு உடனேயே வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருந்தால் சர்வதேச சமூகம் உண்மை நிலையை விளங்கிக் கொண்டிருந்திருக்கும். இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் மனித அவலங்களுக்கு இதே கண்காணிப்புக்குழுவும் ஏதோ ஒரு விதத்தில் உள்ளடங்குகிறார்கள் என்பது கவலையளிக்கின்ற விடயமாகும்.
இத் தொண்டு அமைப்புக்களின் உறுப்பினர்கள் கொல்லப்பட்ட பின்னர் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையும் உரியமுறையில் இந்த போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவால் வெளிப்படுத்தப்படவில்லை. இன்னும் சில காலம் சென்ற பின்னர், செஞ்கோலை படுகொலையின் உண்மைநிலையை (இவர்கள்) வெளிப்படுத்துவதால் என்ன நடந்துவிடப்போகிறது?
எப்படி இருந்தபோதும் தற்போது என்றாலும் சிங்கள அரசின் தொண்டர் அமைப்புக்களின் உறுப்பினர்களை கொன்றதை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் கடந்த காலங்களில் வன்னி மண்ணில் நடந்த கிளைமோர் தாக்குதல்களையும் வெளிப்படையாக கண்டித்திருப்பதுடன் சிங்கள அரசு மீது குற்றம் சாட்டியுள்ளமை ஆறுதல் அடையகூடியதாக இருக்கிறது.
இவ்வாரம் இந்தியன் ருடே சஞ்சிகைக்கு பேட்டி அளித்த மகிந்த ராஜபக்சவிடம் செஞ்கோலை படுகொலை தொடர்பாக கேட்கப்பட்டபோது “கொல்லப்பட்டவர்கள் சேட்டும் ரவுசரும் அணிந்திருந்ததாகவும் அதனாலேயே கொல்லப்பட்டார்கள் எனவும் அவ்வாறான உடைகளை தமிழ்ப் பெண்கள் அணிவதில்லை எனவும் அதனால் அவர்கள் போராளிகள் எனவும் அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்திருக்கிறார்.
கொல்லப்பட்டவர்களின் சடலங்களை பார்த்தால் மகிந்த எவ்வளவு பொய்யன் என்பதை புரிந்து கொள்ளமுடியும். ஒருவன் அணிந்திருக்கும் உடைகளை பற்றி கூறி அதன் மூலம் ஒரு படுகொலையை நியாயப்படுத்துகின்ற உலகின் முதலாவது பயங்கரவாதி மகிந்த ராஜபக்சவாகவே இருக்கமுடியும்.
தொடர்புடைய சுட்டிகள் கண்காணிப்புக்குழுவின் அறிக்கை அதற்கான சிங்கள அரசாங்கத்தின் விளக்கம்
|
|
|
|