<BODY><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9107255\x26blogName\x3d%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thamilsangamam.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thamilsangamam.blogspot.com/\x26vt\x3d-4696126665130882971', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
   
பதிவு பற்றி

விடுதலைக்காக குருதி சொட்டும் தமிழர்களின் உணர்வுகளை சொல்லும் ஒருவனின் பதிவும் பகிர்வும்.
  thamillvaanan@gmail.com
 
எதிரொலி
எதிரொளி
முன்னைய பதிவுகள்
தொகுப்பு
மாததொகுப்பு
உங்கள் வரவுகள்

To see all visitor details
நன்றிகள்

Powered by Blogger
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

ஒரு தந்தையின் கதை
இது ஒரு தந்தையின் கதை. இலங்கைத்தீவில் எப்படியாவது இணைந்து வாழல் என்ற கோட்பாட்டில் ஊறிப்போன சில தந்தையர்களில் இவரும் ஒருவர். காசிப்பிள்ளை மனோகரன் - நான்கு மாதங்களுக்கு முன்னர், அப்பகுதியில், மிகவும் பிரபல்யமான மருத்துவர். கப்பல்களில் வேலைசெய்வோரும் கடற்படையினரும் கூட அவரிடம் சிகிச்சை பெற வருவார்கள். இப்போது அவர்கள் அவ்வாறு வரபோவதில்லை. மனோகரனுக்கு அதிகளவான சிங்கள நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் இனிமேல் அவர்கள் தொலைபேசியிலோ அல்லது நேரிலோ இவருடன் கதைக்கபோவதில்லை.

அவருடன் தொலைபேசி ஊடாகத்தான் தொடர்புகொள்ள முடிந்தபோதும் அவரது வேதனைகளை என்னால் உணரமுடிகிறது. தன்னால் இனிமேலும் திருகோணமலையில் வாழமுடியாது என்பதை சொல்கிறார். தற்போது இவருக்கு வருகின்ற அனேகமான தொலைபேசி அழைப்புகள் மிரட்டுகின்ற அல்லது எச்சரிக்கின்ற அழைப்புக்களாகவே இருக்கிறது.

மனோகரனின் மனைவி தேவகுஞ்சரம்பாள். அவரும் ஒரு வைத்தியர். அவராலும் இனிமேல் அந்த தொழிலை செய்யமுடியாது. மனோகரன் தழுதழுத்த குரலில் “ நான் எனது மகனை இழந்துவிட்டேன். எனக்கு இப்போது மிரட்டுகின்ற தொலைபேசி அழைப்புக்கள் தான் வந்துகொண்டிருக்கின்றது. எல்லோருக்கும் பயமாக இருக்கிறது. எனது மகளும் மூத்தமகனும் இங்கிலாந்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் தொலைபேசியில் கவலைப்பட்டு அழுவார்கள். எங்களுடைய வாழ்க்கை ஏன் இப்படி?” என வேதனையுடன் கூறுகிறார்.

ஜனவரி மாதம் 2 ஆம் திகதி மனோகரனுடைய 21 வயதான மகன் ரஜிகருடன் இன்னும் நான்கு நண்பர்கள் திருகோணமலை கடற்கரைப்பகுதியில் சுடப்பட்டார்கள். சிறிலங்கா கடற்படையினர் தான் சுட்டதாக இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.

இது தொடர்பாக மகிந்த அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் “இக்கொலைகளுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நீதியின் முன்னிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்” என கூறியது. ஆனால் இதுவரை அக்கொலையை செய்தவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறிலங்கா காவ்லதுறையினரோ தங்களிடம் உரிய சாட்சியங்கள் இல்லை என கூறுகிறார்கள். அதனால் இன்னும் ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

சிறிலங்கா சிஐடியினர் தனியான இன்னொரு விசாரணையை செய்து கொண்டிருக்கிறார்கள். 13 விசேட அதிரடிப்படையினர் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். அவர்களும் பின்னர் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

அப்பகுதியில் பயன்படுத்தப்பட்டதாக அறியப்பட்ட 26 துப்பாக்கிகள் ஆயுதப்பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால் அந்த ஐந்து மாணவர்களும் அந்த துப்பாக்கிகளால் சுடப்பட்டிருக்கவில்லை என அவர்களது ஆய்வறிக்கை கூறுகிறது.

அந்த ஐந்து மாணவர்களின் பெற்றோரிலும் மனோகரன் மட்டுமே துணிந்து நீதிமன்றத்தில் சாட்சி சொன்னார். தான் மகிந்த ராஜபக்சவுக்கு நேரடியாக கடிதம் எழுதப்போவதாகவும் ஆனால் தற்போது தான் அதற்கான மனநிலையில் இல்லையெனவும் கூறுகிறார்.

“எனக்கு இந்த நீதிமன்ற விசாரணைகளில் ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது. எனது மகன் அவன் இறந்துவிட்டான். அவனை இனிமேல் நான் திரும்பபெற்றுக் கொள்ளபோவதில்லை. தற்போது தங்களுக்கு எனது மகனை சுட்டவர்களை தெரியாது என கூறுகிறார்கள். ஏன்?... நான் சுடப்பட்டநேரத்தில் அங்கேதான் இருந்தேன். நான் அந்த துப்பாக்கி சூட்டுவெளிச்சத்தை தெளிவாக பார்த்தேன். துப்பாக்கி சூட்டுச்சத்தத்தை தெளிவாக கேட்டேன். அப்போது அந்ந பிள்ளைகள் அப்படியே சரிந்து விழுந்தார்கள். படையினர் உடனடியாக அனைத்து இடங்களையும் சுற்றிவளைத்தார்கள. ……. ஆனால் தற்போது தங்களுக்கு எதுவும் தெரியாது என சொல்கிறார்கள்”.



திருமலையில் கொல்லப்பட்டஐந்து மாணவர்கள்

தற்போது அடிக்கடி அனாமதேய மிரட்டல் தொலைபேசி அழைப்புக்கள் அவருக்கு வந்துகொண்டிருக்கின்றன. மனோகரன் நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன அன்றிரவு முதலாவது மிரட்டல் அழைப்பு வந்தது. அதில் “நீ மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சி சொன்னால் உன்னையும் உனது பிள்ளைகளையும் கொல்லுவோம்” என கூறப்பட்டது. அந்த அநாமதேய குரல் சிங்களத்திலும் தமிழிலும் கலந்து இருந்ததாக மனோகரன் சொல்கிறார்.

அதற்கு பின்னரும் அதிகமான மிரட்டல் தொலைபேசி அழைப்புக்கள் வந்துகொண்டிருந்தன. அதனால் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் முறையிட்டேன். அவர்கள் சிறிலங்கா காவல்துறையினரிடம் முறையிடுமாறு சொன்னார்கள். நான் சிறிலங்கா காவல்துறையை நம்பமுடியாது. ஏனென்றால் அவர்கள்தான் அந்த பகுதியை சுற்றிவளைத்தார்கள். அதற்கு பின்னர் எனது மகன் சுடப்பட்டார். எப்படி என்னால் அதே அதிகாரிகளை நம்பமுடியும் என கேள்வி எழுப்புகிறார் அவர். அதனால் அவர் சார்பாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் முறைப்பாடு செய்தனர். ஆனால் எந்த பயனும் இல்லை.

ஜனவரி மாத இறுதியில், மோட்டார் சைக்கிள்களில் கொஞ்ச பேர் வந்து மீண்டும் மிரட்டிவிட்டு சென்றார்கள். இதன் பின்னர் ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவுக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அவர்கள் வெளிப்படையாக இவ்விசாரணையில் நீதி கோரியும் மனோகரனின் குடும்பத்துக்கு பாதுகாப்பு கோரியும் வேண்டுகோள் விடுத்தார்கள். மார்ச் மாதம் 6 ஆம் திகதி மீண்டும் மோட்டார் சைக்கிள்களில் வந்தார்கள். மனித உரிமைக்குழுவில் ஏன் முறையிட்டாய் என கேட்டு மிரட்டினார்கள்.

பின்னர் மார்ச் மாதம் 11 ஆம் திகதி மனோகரனுக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அது சரியான தமிழில் எழுதப்பட்டிருக்கவில்லை. “அது நிச்சயம் தமிழர் அல்லாதோரால் எழுதப்பட்ட கடிதம் என உறுதியாக கூறமுடியும். ஒவ்வொரு நாளும் மிரட்டல் … மிரட்டல். எப்படி எங்களால் இனிமேல் வாழமுடியும்? ”. அவரால் வேதனையை கட்டுப்படுத்தமுடியவில்லை.

நீங்கள் விடுதலைப்புலிகளுடனோ அல்லது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரோடோ ஏதாவது தொடர்பு வைத்திருந்தீர்களா? என கட்டுரையாளர் கேட்டார். “ நான் இந்த அரசியலை பற்றி கவனம் செலுத்துவதில்லை. நான் ஒருபோதும் புலிகளை நம்பியதில்லை. அவர்கள் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள். எனக்கு எப்படியாவது அமைதியான வாழ்க்கை வேண்டும். அதனால்தான் நான் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறி திருகோணமலையில் குடியேறினேன். இங்கு மூன்று இன மக்களும் வாழ்கிறார்கள். அல்லது நான் வன்னியில் வாழ்ந்திருக்கமுடியும்.”

“நான் பல சிங்கள நண்பர்களையும் முஸ்லீம் நண்பர்களையும் நாடு முழுவதும் கொண்டிருக்கிறேன். காமினி திசாநாயக்கா எனது தந்தையாருக்கு மிகவும் நெருக்கமானவர். அவருடைய தேர்தலுக்கு பல உதவிகளை எனது தந்தையார் செய்தார். மிகவும் பிரபல்யமான வர்த்தகர் பிஎன் டேவிட் சில்வா எனது நண்பர். சட்டத்தரணி டெஸ்மன் பெர்ணாண்டோ எனது நண்பர். முன்னாள் எஸ்பி தயா சமரவீரா எனக்கு மிகவும் பரிச்சயமானவுர். அவரை எப்போதும் எனது (சுடப்பட்டு இறந்துபோன) மகன் “தயா அங்கிள்” என்றுதான் அழைப்பான்”.


கடந்த தேர்தலில் எல்ரிரியினர் ஒருவரையும் தேர்தலில் பங்குபற்றவேண்டாம் என கூறினார்கள். ஆனால் நான் வாக்களிக்க சென்றேன். நான் மட்டுமல்ல எனது (இறந்து போன) மகனும் வாக்களித்திருந்தான்.

தற்போது மனோகரன் திருகோணமலையிலிருந்து வெளியேற விரும்புகிறார். ஆனால் தனது ஏனைய இரண்டு மகன்களுடைய அடையாள அட்டையிலும் யாழ்ப்பாண வதிவிட முகவரியை கொண்டுள்ளதால் கொழும்புக்கும் செல்ல தயங்குகிறார். ஏனென்றால் கொழும்பில் அவர்கள் இலகுவாக புலிகளாக முத்திரை குத்தப்படலாம்.


குறிப்பு: இப்பதிவு நமினி விஜயதாசவால் எழுதப்பட்ட ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம் ஆகும். மனோகரன் தமிழர்களின் விடுதலைப் போராட்ட பாதையை ஆதரிக்காத போதும் தமிழர் என்ற ஒரே காரணத்தால் அவரது மகன் சுடப்பட்டிருக்கிறார். இப்போது அவரும் சிங்களவர்களால் தமிழ்ப்புலியாகவே பார்க்கப்படுகிறார். இச்சம்பவம் சொல்லும் செய்திகள் என்ன?
வேலூர் புரட்சி
“எந்த யூலை மாதம் 10-ம் திகதி வேலூர் கோட்டையில் இரத்தவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதோ, எப்போது 800 தமிழ் மறவர்கள் பிணமாக கிடந்தார்களோ அந்தநாள் இந்நாள். தமிழ் வீரர்கள் 200 –ற்கும் மேற்பட்ட வெள்ளையர்களை வேட்டையாடிய நாள் யூலை 10–ம் திகதி. இந்த சிப்பாய் புரட்சி முடிந்து 200 ஆண்டுகள் ஓடிவிட்டது” இவ்வாறு வேலூர் சிப்பாய் கலகம் நடைபெற்ற 200 ஆவது ஆண்டை நினைவுகூர்ந்து நடத்தப்பட்ட தபால்தலையை வெளியிட்டு தமிழகமுதல்வர் கருணாநிதி அவர்கள் தெரிவித்தார்.

நினைவுத் தபால்தலை வெளியிடும் நிகழ்வில் தமிழகமுதல்வர்

அவரது மேலதிக உரையில்:

அன்றைக்கு நம் வீரர்கள் தோல்வி அடைவதற்கு காரணம் அவர்களுக்கு சிறந்த தலைமை இல்லாததுதான் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார். இந்த கருத்தை ஏற்க நான் தயாராக இல்லை. மதுரை, நெல்லை, சிவகங்கை மாவட்டங்களிலும் வெள்ளையருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது.

இருந்தும் ஏன் தமிழர்கள் தோற்றார்கள்? இடையிலே துரோகிகளும் இருந்ததால்தான் தோற்றார்கள். கட்டப்பொம்மனுக்கு ஒரு எட்டப்பன் இருந்தான். அவன் கட்டப்பொம்மனை காட்டிக்கொடுக்கவில்லையா?

இப்படி நம் மன்னர்கள் படைபலம் கொண்டவர்களாக இருந்தாலும் வெற்றி பெறாததற்கு காரணம் கூடவே உடன்பிறந்தே கொல்லும் வியாதி போல துரோகிகளால்தான் தோற்கநேரிட்டது. வெற்றிபெறமுடியாமல் போனது.

இந்தியாவின் முதல் விடுதலைப்போருக்கு வித்திட்டதே வேலூர் சிப்பாய் புரட்சி என்பதை வரலாறு ஒப்புக்கொண்டுள்ளது. எதிர்கால தலைமுறையினருக்கு இந்திய சுதந்திரத்தில் தமிழனின் பங்கு என்ன என்பதை உணர்த்தவேண்டும். வேலூர் சிப்பாய் புரட்சி ஒரு திருப்புமுனையாக, முதல் போராட்டமாக இருந்தது என்பதை நினைவுபடுத்த வேண்டும்.

எதிர்காலத்தில் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் வேலூர் நினைவுச்சின்னம் இருக்கும். எனினும் மேலும் ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்படும்.

அத்துடன் சிப்பாய் புரட்சியை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பாடபுத்தகங்களிலும் அவை உள்ளடக்கப்படும். அது மாணவர்களுடைய உள்ளத்தில் வீரத்தை ஊட்டுவதாக அமையும்.



மேற்கண்டவாறு தமிழக முதல்வர் கருணாநிதி தனது உரையில் கூறினார்.

தமிழக வரலாற்றின் போராட்ட கதாநாயகர்கள் மறைக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது மறக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்திய சுதந்திர போராட்டம் என்பது தனியே அண்ணல் காந்தியால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சை ரீதியான போராட்டங்களால் தான் வழிநாடாத்தப்பட்டதான கருத்துருவாக்கம் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசின் நேற்றைய நிகழ்வானது அப்போராட்ட தியாகிகளுக்கு சிறியளவாவது கெளரவத்தை கொடுத்திருக்கும்.


மாவீரன் பூலித்தேவன் வாழ்ந்த இல்லம்

வேலூர் சிப்பாய் புரட்சி நடைபெறுவதற்கு முன்னரும் கூட ஆங்கிலேயருக்கு எதிராக பல போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. இந்திய சுதந்திர வரலாற்றில் “வெள்ளையனே வெளியேறு” என்று முதன்முதலாக 1755 ஆம் ஆண்டில் வீரமுழக்கமிட்டவன் மாவீரன் பூலித்தேவன். 1755 ஆம் ஆண்டு கேணல் எரோன் தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் அன்னியன் எவனுக்கும் வரி வசூலிக்கும் உரிமை கிடையாது என வீரமுழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றவன். அவரது நினைவாக திருநெல்வேலி சிவகிரி மாவட்டத்தில் உள்ள நெல்கட்டும் செவல் எனும் இடத்தில் உள்ள அவர் வாழ்ந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக பேணப்பட்டு வருகிறது.

மேலதிக தரவுகளுக்கான இணைப்புக்கள்:

1. தமிழ்நாடு இணையதளம்

2. விக்கிபீடியா

3. பிபிசி தமிழோசை ஒலித்தொகுப்பு



4. வேலூர் சிப்பாய் கலகம் பற்றி தினகரனில் வெளியான கட்டுரையை சகவலைப்பதிவர் சிவபாலன் அவர்கள் இணைத்திருக்கிறார். அக்கட்டுரை வேலூர் சிப்பாய் கலகம் தோற்கடிக்கடிக்கப்பட்டதற்கான காரணத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் வேலூர் சம்பவம் நடைபெற்று ஏறத்தாள 150 ஆண்டுகள் இந்தியநாடு சுதந்திரத்துக்காக பயணிக்கவேண்டியிருந்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அப்பதிவுக்கு இங்கு செல்லவும்.

5. இந்தியாவின் முதலாவது சுதந்திரப்போர் எனும் தலைப்பில் கரிகாலனின் பதிவு
தன்னாட்சி உரிமை
விடுதலைப்புலிகளின் சட்டஆலோசகர் உருத்திரகுமாரனால் தற்போதைய அமைதி நடவடிக்கைகள் பற்றிய அறிக்கை ஒன்று வெளிவிடப்பட்டு இருக்கிறது. அதில் அவர் அமைதி நடவடிக்கையின் போதான தமிழர்தரப்பு நியாயப்பாடுகளை வாத அடிப்படையில் முன்வைத்து செல்கிறார். அதில் அவர் குறிப்பிட்ட விடயங்களை தொகுத்து தருகின்றேன்.

முதலாவதாக அமெரிக்காவின் செப்ரம்பர்-11 2001 தாக்குதலுக்கு முன்னதாகவே விடுதலைப்புலிகளால் அமைதிமுயற்சிகள் டிசம்பர் 2000 அளவில் முன்னெடுக்கப்பட்டது. அதாவது விடுதலைப்புலிகளே பேச்சுவார்த்தைக்கான அடிப்படையை உருவாக்கினார்கள். இதற்காக விடுதலைப்புலிகளால் ஒரு தலைப்பட்சமான போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளாலும் அப்போது ஆட்சிபீடமேறிய அரசினாலும் இடைக்கால நிர்வாகம் ஒன்றை இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் ஏற்படுத்துவதே பேச்சுவார்த்தைகளுக்கான ஆரம்பமுயற்சியாக கருதப்பட்டு அதற்கான ஆணையும் மக்களால் பெறப்பட்டது. ஆனால் தெற்கில் தொடர்ந்த கடும்போக்குவாத நிலைப்பாட்டால் அதனை ஏற்படுத்தமுடியாத நிலையில் அப்போதைய அரசு இருந்தது. அந்த விடயத்தில் கூட விடுதலைப்புலிகள் நெகிழ்வுதன்மையை பேணி வேறு வழிகளில் அமைதி முயற்கிகளை தொடர சந்தர்ப்பம் வழங்கினர்.

அதன்படி அரசு – புலிகள் இணைந்த சம அங்கத்துவமுடையதாக உபகுழுக்களை அமைக்கும் முயற்சி பரிந்துரைக்கப்பட்டு விடுதலைப்புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குறிப்பாக, இக்குழுவிலிருந்த அரசு தரப்புக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது. ஆனாலும் இவ்வாறான கட்டமைப்பை சிறிலங்கா அரசியல் யாப்பின் கீழ் நடைமுறைப்படுத்த முடியாதென காரணங்களை கூறி அவ் உபகுழுக்களும் செயலிழக்கம் செய்யப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் விடுதலைப்புலிகளால் முதன்முதலாக ஒக்ரோபர் 31 2001 இல் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைபு முன்வைக்கப்பட்டது. இதனை ஆரம்பகட்டமாக கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை அது வழங்கியது. ISGA என அழைக்கப்பட்ட இத்திட்டமானது ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இடைக்கால செயல்திட்டமாக இருந்தது.


துரதிஸ்டவசமாக அப்போது சனாதிபதியாகவிருந்த சந்திரிகா குமாரதுங்கா பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்குள் இருந்த மிக முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை தன்வசப்படுத்தி அமைதி முயற்சிகளை முடக்கினார்.

டிசம்பர் 2005 ஏற்பட்ட சுனாமியை தொடந்து ஓர் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கலாம் என பலரும் எதிர்பார்த்தனர். அவ்வாறான தொடர்முயற்சிகளின் விளைவாக PTOM என அழைக்கப்பட்ட நிர்வாக கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அரசு – புலிகள் என இருதரப்பும் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட இக்கட்டமைப்பை செயற்படுத்தமுடியாதவாறு சிறிலங்காவின் நீதித்துறை தடுத்துவிட்டது.

விடுதலைப்புலிகளால் வெளிக்காட்டப்பட்ட ஒவ்வொரு சமாதானத்துக்கான அர்ப்பணிப்பும் சிறிலங்கா சட்டங்கள் யாப்புக்களின் பெயரால் செயல்முடக்கம் செய்யப்பட்டது.

போர்நிறுத்த வன்முறைகளை பொறுத்தவரை – SLMM குறிப்பிடுவதுபோல – சிறிலங்கா தேசிய கொடியை வடக்குகிழக்கு பகுதியில் ஏற்றுவதற்கு தடுக்கப்படுவதையும் தமிழர் வாழ்விடங்களிலிருந்து தமிழர்களை வெளியேற்றி சிங்கள இராணுவத்தினர் தமது இராணுவ தளங்களை அமைத்து இருப்பதையும் தமிழர்கள் மீன்பிடித்தொழிலையோ விவசாயத்தையோ செய்யமுடியாதவாறு தடுக்கப்படுவதையும் ஒருங்கே ஒப்பிட்டுபார்க்க முடியாது.


சிறிலங்கா அரசானது விடுதலைப்புலிகளே ஆகக்கூடுதலான போர்நிறுத்த வன்முறைகளில் ஈடுபட்டதாக கூறுகிறது. ஆனால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச்செல்லமுடியாதவாறு நான்கு வருட சமாதான காலத்தில் கூட தடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நான்கு வருட காலத்தின் 1460 நாட்களையும் கருத்தில் எடுத்தால் உண்மையில் சிறிலங்கா அரசுதான் ஆகக்கூடுதலான போர்நிறுத்த வன்முறைகளில் ஈடுபட்டிருக்கிறது.

போர்நிறுத்த உடன்படிக்கையின் பந்தி 2 படி, இராணுவத்தினர் பாடசாலைகள், ஆலயங்கள் பொதுக்கட்டடங்கள் அனைத்திலிருந்தும் வெளியேறி பொதுமக்களின் இயல்பான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தி இருக்கவேண்டும். ஆனால் இதுவரை இராணுவத்தினர் அவ்வாறு வெளியேறவில்லை. யாழ்குடாநாட்டில் பொதுமக்கள் வாழக்கூடிய பிரதேசங்களின் மூன்றிலொரு பகுதியில் இராணுவத்தினர் தமது இராணுவதளங்களை அமைத்துள்ளனர்.


இராணுவவலுச்சமநிலை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பொதுமக்கள் வாழ்விடங்களில் இராணுவத்தினர் தளங்களை அமைக்கலாம் என சில தரப்பினரால் கூறப்படுகிறது. சர்வதேச சட்டங்களின்படி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அல்லது இராணுவரீதியான தவிர்க்கமுடியாத மிக முக்கிய காரணங்களுக்காக பொதுமக்கள் வெளியேறுமாறு கோரப்படலாம்.

ஆனால் நான்கு வருடங்களாக போர்நிறுத்தம் நடைமுறையில் இருக்கும்போது இராணுவ வலுச்சமநிலைக்காக ஒரு அரசாங்கமானது மக்களை குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழக்கூடாது என கூறமுடியாது. அத்தோடு சர்வதேச சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹேக் உடன்படிக்கையின் கீழ் பொதுமக்களின் சொத்துக்களை கையகப்படுத்தப்படுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

புறூண்டி, ஜோர்ஜியா, பொஸ்னியா, கம்போடியா, கொசோவா, குவாட்டமாலா, எல்சல்வோடர், மசிடோனியா, சியாராலியோன், லைபீரியா போன்ற எந்த நாடுகளின் அமைதி உடன்படிக்கைகளிலும் இடம்பெயர்ந்த மக்கள் மீள தமது சொந்த இடங்களுக்கு சென்று குடியேறுவதை இராணுவவலுச்சமநிலையோடு கருதி பிரச்சனைகளை இழுத்தடித்து செல்லவில்லை.

அரச ஆதரவுடனான துணைஆயுதப்படைகளின் செயற்பாடுகளும் அமைதி முயற்சிக்கான பெரிய முட்டுக்கட்டையாக இருக்கின்றது. இராணுவத்தோடு சேர்ந்து இயங்கும் அனைத்து துணை ஆயுதப்படைகளும் செயல்முடக்கம் செய்யப்பட்டிருக்கவேண்டும். தற்போதும் துணைப்படைகளின் செயற்பாடு இருப்பதை SLMM உம் அமெரிக்காவின் 2006 ஆம் ஆண்டுக்கான அறிக்கையும் வெளிக்காட்டியுள்ளது.

போர்நிறுத்த உடன்படிக்கையானது அவ்வுடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட காலப்பகுதியிலிருந்த துணைப்படைகளை மட்டுமே குறிப்பதாகவும் அதற்கு பின்னர் உருவான துணைப்படைகளை அது கட்டுப்படுத்தாது எனவும் வாதம் முன்வைக்கப்படுகிறது. போர்நிறுத்த உடன்படிக்கையானது செயற்பாட்டு நடைமுறையில் உள்ள உயிர்நிலை உடன்படிக்கை என்பதால் அது அனைத்து துணைப்படைகளையும்தான் கருதுகிறது. அவ்வாறு இல்லாவிடில் இரண்டு தரப்புமே வெவ்வேறு பெயர்களில் துணைப்படைகளை உருவாக்கி தமது நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

அடுத்து சிறிலங்கா ஆயுதப்படைகளின் வலிந்து தாக்கும் நடவடிக்கைகளும் குறிப்பிடத்தக்கயாகும். 2003 ஆம் ஆண்டில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் 24 விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் கடலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். விடுதலைப்புலிகளின் வணிககப்பல் ஒன்று சர்வதேச கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டபோதும் புலிகள் அதியுச்ச சகிப்புத்தன்மையை வெளிக்காட்டி சமாதான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டனர்.


சிறிலங்கா அரசானது விடுதலைப்புலிகளின் கப்பலானது ஆயுதங்களை கொண்டிருந்ததாகவும் அதனால்தான் அதனை மூழ்கடித்ததாகவும் கூறியது. அவ்வாறு புலிகளின் கப்பல்கள் ஆயுதங்களை கொண்டிருந்தாலும் அதனை தாக்குவதற்கான அதிகாரத்தை சிறிலங்கா அரசாங்கமானது கொண்டிருக்கவில்லை என்பது முக்கியமானதாகும்.

வெளிப்படையாக போர்நிறுத்த உடன்படிக்கையில் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போக்குவரத்துக்கள் பற்றி குறிப்பிடுவதை இரண்டு தரப்பாலுமே வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருந்தன. ஏனெனில் விடுதலைப்புலிகளுக்கான வழங்கலகள் கடல்வழியாகத்தான இருக்கின்றன என்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்திருந்தன. ஆனால் போர்நிறுத்த உடன்படிக்கையின் கீழ் வரையறுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாகவே அவை தவிர்க்கப்பட்டிருந்தன.

விடுதலைப்புலிகள் ஒரு தேசிய விடுதலைப் போராட்ட இயக்கமாகும். அதன்காரணமாக, U.N General Assembly Resolution சரத்து 3034 மற்றும் 3014 படி விடுதலைப்புலிகள் ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமையை கொண்டிருக்கிறார்கள்.

அடுத்ததாக சர்வதேச சமூகம் சரியான முறையில் அமைதி முயற்சிகளை முன்னெடுக்க உதவவில்லை. சர்வதேச சமூகம் எப்போதும் இறுதித்தீர்வானது ஐக்கியப்பட்ட சிறிலங்காவுக்குள் அமையவேண்டும் என வற்புறுத்திவருகிறது. இது தமிழ்மக்களின் சுயநிர்ணய கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கிறது. அத்தோடு உலகின் வேறு பகுதிகளில் பின்பற்றப்படும் சர்வதேச நடைமுறையுடன் முரண்படுகிறது.


Machakos Protocol ஆனது தென்சூடான் மக்களின் தனிநாடு அமைப்பதற்கான உரிமையை ஏற்றுக்கொள்கிறது. அதன்படி ஆறு வருடங்களுக்கு பின்னர் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் அவர்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைப்பதா? அல்லது சூடானுடன் இணைந்து இருப்பதா? என முடிவெடுக்க முடியும்.

அதேபோல Good Friday உடன்படிக்கையானது வட அயர்லாந்து மக்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தை ஏழு வருடங்களுக்கு ஒரு முறை தீர்மானித்துக்கொள்வதற்கு வழிவகை செய்கிறது.

இதேவிதத்தில் சேர்பியன் – மொன்ரிகிறின் உடன்படிக்கையானது மொன்ரிகிறின் மக்களின் தனிநாடு அமைப்பதற்கான அவர்களது உரிமையை ஏற்றுக்கொள்வதுடன் அதற்கான வாக்கெடுப்பை அடுத்த மூன்று வருடங்களில் நடாத்தப்படுவதற்கு வழிவகை செய்கிறது.

பப்பூவா நியூகினியா - போகன்விலே உடன்படிக்கையானது போகன்விலே மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானித்துக்கொள்ளும் வாக்கெடுப்பை 10 – 15 வருடங்களுக்கு இடையில் நடாத்தப்படுவதை ஏற்றுக்கொள்கிறது.

சர்வதேச சமூகமானது மேற்கூறப்பட்ட எந்த உடன்படிக்கைகளையும் – அந்தந்த நாடுகளின் ஐக்கியத்தையும் ஓருமைப்பாட்டையும் பாதித்தபோதும் – எதிர்க்கவில்லை என்பதையும் சர்வதேச சமூகம் பேச்சுவார்த்தைகளின் மூலம் பெறப்படும் தீர்வுக்கு முன்னரே அதற்கான எல்லைகளை வரையறுத்து இருக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

இவ்வாறு மேற்கூறப்பட்ட நாடுகளில் காணப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக பல்வேறு வடிவங்களான சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டபோதும், இலங்கை இனநெருக்கடியில் காணப்படும் தீர்வானது இலஙகையின் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் பேணக்கூடியதாக இருக்கவேண்டும் என கூறுவது சர்வதேச சமூகம் இரட்டை அணுகுமுறையை கடைப்பிடிப்பதாக கருதவேண்டியுள்ளது.


இவ்வாறு தமிழர்களின் நியாயமான கோரிக்கையான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வினை சர்வதேச சமூகம் ஆதரிக்காதுவிட்டால், அது சிறிலங்கா அரசை நியாயமான தீர்வொன்றை முன்வைக்க உந்துதலாக அமையமாட்டாது. அதேவேளை சர்வதேச சமூகம் தமிழர்களது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளும்போது தமிழர்களும் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை வைத்து செயற்படுவர்.

விடுதலைப்புலிகளின் சட்டஆலோசகரின் முழுமையான அறிக்கை

உயர்வலய பாதுகாப்புவலயங்கள் சம்பந்தமான இன்னொரு பதிவு
எழுதமுடியாத காவியங்கள்
இன்று தமிழீழத்தில் மிகவும் முக்கியமான நாள். அதுதான் கரும்புலிகள் தினம். விடுதலைப் புலிகளிடமுள்ள தற்கொலைப்படையணி இலங்கைத்தீவு முழுவதும் பரவலாக பல தாக்குதல்களை தனித்தும், மரபுவழித் தாக்குதல் படையணிகளுடன் இணைந்தும் செய்திருக்கிறது. இவர்களது வரலாறுகள் எழுதப்படாத காவியங்களாகவும், வரையப்படாத சித்திரங்களாகவும் நீண்டு செல்கின்றது.

விடுதலைப்புலிகளின் கரும்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பெருமளவான தாக்குதல்கள் இராணுவ இலக்குகளாக இருந்திருக்கின்றன. நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் தங்கியிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது முதலாவது தாக்குதல் இதே தினத்தில் கப்டன் மில்லர் எனப்படும் போராளியால் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து பல தாக்குதல்கள் இடம்பெற்றபோதும் இறுதியாக கட்டுநாயக்கா விமானநிலையத்தின் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் மிகவும் முக்கியத்துவமானதாகும். விமானநிலையத்தில் இருந்த ஒரு பயணிக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு அத்தாக்குதலை செய்திருந்தார்கள்.

தற்கொலைப்பாணியிலான இவ்வகை தாக்குதல்கள் வெவ்வேறு விடுதலைப் போராட்டங்களிலும், இரண்டாம் உலகப்போரின்போதும் பரவலாக கையாளப்பட்டு இருக்கின்றன. ஆனாலும் தற்போதுள்ள கணிப்புகளின்படி அதிக எண்ணிக்கையான தாக்குதல்கள் கரும்புலிகளாலே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.


பொட்டு அம்மான்


இவ்வாறான தாக்குதல்கள் இரண்டாம் உலகப்போரின் போதும் பின்னர் பல்வேறு விடுதலை அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய கணிப்புகளின்படி அதிகளவிலான இத்தகைய தாக்குதல்கள் கரும்புலிகளாலே மேற்கொள்ளப்ட்டிருக்கின்றன. இவ்வகையான தாக்குதல் போர்முறை இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னே கைக்கொள்ளப்பட்டிருப்பதாக சச்சி சிறிகாந்தா குறிப்பிடுகிறார். இதற்காக மகாபாரத போரிலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக்காட்டுகிறார்.

இன்றுவரை இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கரும்புலிகளாக மரணமடைந்திருக்கிறார்கள். லெப்ரினன்ற் செங்கண்ணன் எனப்படும் தமிழகம் சிவகாசியை சொந்த இடமாக கொண்ட ஒருவரும் இவர்களுள் அடங்குகிறார். இவர் 1993 ஆம் ஆண்டு பூநகரி முகாம் மீதான தாக்குதலின்போது அதற்கு ஆதரவு வழங்குவதற்காக பலாலி விமானதளம் மீதான தாக்குதலில் மரணமடைந்திருக்கிறார்.


விடுதலைப்போராளிகள் ஒவ்வொருவரும் கரும்புலிகளாகவே கருதப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் எதிரிகளினால் கைதுசெய்யப்படும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் தமது கழுத்தில் உள்ள சயனைட் என்ற மருந்தை உட்கொள்வதன் மூலம் மரணமடைந்துவிடுவார்கள். ஆனாலும் எங்கே எப்போது தங்கள் சாவை நிர்ணயித்துக்கொள்ள வேணும் என்பதில் கரும்புலிகளின் நடவடிக்கை சாதாரணமான போராளிகளைவிட மேலோங்கியதாகவும் திகிலூட்டுவதாகவும் இருக்கிறது. இவர்களுடைய தாக்குதல்களை பார்க்கும்போது பயங்கரமாகவும் அவர்களது வெளித்தெரியும் வரலாறுகளை படிக்கும்போது உணர்ச்சிமயமானதாகவும் இருக்கிறது.


நாங்கள் எப்போதும் சாவதற்கு தயார் எனக்கூறும் போராளிகள்

இன்று உலகில் இவ்வாறான தாக்குதலால் பல பொதுமக்கள் கொல்லப்படுவதன் காரணமாக இவ்வகை தாக்குதல்கள் கண்டிக்கப்படுகின்றன. விடுதலை அமைப்புக்கள் எனக்கூறிக்கொள்ளும் சில நாசகார சக்திகளால் மேற்கொள்ளப்படும் இத்தாக்குதல்கள் பல அப்பாவி பொதுமக்களை பாதிப்படையச்செய்துள்ளன. ஆனால் கரும்புலிகளை பொறுத்தவரை எந்தவொரு தாக்குதலும் பொதுமக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

கரும்புலிகளின் வரலாறுகள் ஒருபோதும் முழுமையாக வெளிவிடப்பட்டதில்லை. 1994 ஆம் ஆண்டு யூலைமாத விடுதலைப்புலிகள் இதழில் சிலதாக்குதல் சம்பவங்களை கோடுகாட்டி சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள். அதற்கான இணைப்புக்களை கீழே இணைத்திருக்கிறேன். அதன்பின்னர் ஒரு தடவையும் அவ்வாறு வேறு சில சம்பவங்கள் கூறப்பட்டிருந்தன. இவை கரும்புலிகளின் மனவுணர்களை சிறியளவில் வெளிப்படுத்தியிருக்கின்றன. அதுபற்றி தெரிந்தவர்கள் தயவுசெய்து அறியதரவும்.

இன்று தாயகத்தில் எங்களது குடும்பத்தினர்களோ அல்லது உறவினர்களோ மீளக்குடியேறி தமது சொந்த நிலத்தில் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு பின்னால் இந்த வீரர்களது தியாகம் இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையல்ல.

பக்கம் - 1
பக்கம் - 2
பக்கம் - 3
பக்கம் - 4
சாவதற்கான போட்டி

இன்றைய கரும்புலிகள் தினம் பற்றி விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவு பொறுப்பாளரின் விசேடபேட்டி
மறப்போம் மன்னிப்போம்
இந்தியாவுக்கும் தமிழீழத்துக்குமான தொடர்பானது தனியே ஒரு சில மனிதர்களால் நிர்ணயிக்கப்படுவதல்ல. மாறாக அதுவொரு நெருங்கிய உறவுநிலையின் பிணைப்பாகவே இருந்துவந்திருக்கிறது. அதனால்தான் இந்தியாவுக்கும் புலிகளுக்கும் போர் ஏற்பட்டபோது கூட தாங்கள் இந்தியர்கள் என்ற நிலைக்கு அப்பாலிருந்து ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்தலைவர்களும் தமிழக மக்களும் ஆதரவாக இருந்தார்கள். இந்திய இராணுவம் தமிழீழத்திலிருந்து வெளியேறியபோது இந்திய இராணுவத்தை வரவேற்க கலைஞர் கருணாநிதி அவர்கள் சென்றிருக்கவில்லை. அதேநேரத்தில் ஈழத்தில் காயப்பட்ட போராளிகளுக்கு மருத்துவவசதிகளுகம் இன்னும் பல வசதிகளும் அந்த போர்நேரத்திலும் இருக்கவே செய்தன.


Photobucket - Video and Image Hosting


இந்திய-தமிழீழ யுத்தத்தை உருவாக்குவதில் பெரிதும் காரணியான ஜேஎன் டிக்சிற் அவர்கள் ஒருகட்டத்தில் பேச்சுவார்த்தைகளுக்காக இந்தியப்படையினரின் முகாமுக்கு வந்திருந்த பிரபாகரன் அவர்களை உள்ளடக்கிய குழுவினரை சுட்டுக்கொல்லும்படி இந்திய இராணுவத்தளபதிகளுக்கு கூறினாராம். ஒரு இராஜதந்திரபணியில் ஈடுபட்ட டிக்சிற்றே கொடுமையான உத்தரவை பிறப்பித்தபோதும் அந்த இந்திய தளபதிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கான பிரதான காரணம், அந்த இந்திய தளபதிகள் புலிகள்மேல் வைத்திருந்த தனிப்பட்ட அபிமானமாகும்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்கும் எந்த இராணுவ தளபதியும் அவருக்கு இராணுவ மரியாதை செலுத்த தவறுவதில்லை. அதேபோல விடுதலைப்புலிகளின் தளபதிகளோடும் நல்ல உறவுநிலையே பேணினார்கள். இந்திய இராணுவத்தினர் வீதிகளில் வாகனங்களில் செல்லும்போது எமது மக்கள் அவர்களுக்கு கையசைத்து தமது அன்பை பரிமாறிக்கொள்வார்கள்.

அனைத்துமே தீடிரென ஆட்டம் கண்டது எவ்வாறு?

தியாகி திலீபன் நீர் கூட அருந்தாது ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு உண்ணாவிரதம் இருந்தார். மிகவும் அடிப்படையான மனிதாபிமான அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதத்தை மக்கள்முன் வழங்க ஜேஎன் டிக்சிற் மறுத்தார். அதன்விளைவாக தியாகி திலீபன் தியாகமரணமடைந்தார். பின்னர் புலிகளின் முக்கிய தளபதிகள் சிங்கள படைகளால் கைதுசெய்யப்பட்டபோது அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கவேண்டிய இந்திய அரசு சிங்கள அரசின் கடுமையான நிலைப்பாட்டால் பின்வாங்கியது. பன்னிரண்டு புலிகளின் தளபதிகள் கொல்லப்பட்டார்கள். அத்தோடு இந்திய உளவுத்துறை புலிகளை அழிப்பதற்காக புலி எதிர்ப்பு இயக்கங்களை வளர்க்க தொடங்கியிருந்தது. இதனை அப்போதைய இந்திய தளபதிகள் நன்கு அறிந்திருந்தார்கள்.

இந்திய இராணுவத்தினரும் அவரகளின் தளபதிகளும் இன்னொரு யுத்தம் ஏற்படும் என நினைத்திருக்கவில்லை. ஆனால் இந்திய உளவுத்துறை இந்திய பிராந்திய வல்லாதிக்க நலன்களுக்காக ஒரு யுத்தநிநையை ஏற்படுத்தியது. அதேவேளை இந்திய நடுவண் அரசின் ராஜதந்திரிகளின் அண்ணன் நிலை மனோபாவத்தால் எல்லாமே தலைகீழாக மாற்றப்பட்டன.


Photobucket - Video and Image Hosting


தனிமனித உறவுகளும் தனித்தேசியஇனத்தின் கொள்கை ரீதியான நிலைப்பாடுகளும் வெவ்வேறானவை. ஒரு தேசிய இனத்தின் விருப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய பக்குவம் இருக்கவேண்டும். ஒரு சுதந்திரபோராட்டத்தை தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று சிந்தித்தித்திருக்க வேண்டும். அப்போது இந்தியப்பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மை இந்திய- தமிழீழ யுத்தத்தை உருவாக்கியது. அயல்நாட்டுக்கு சென்று போரில் ஈடுபட்டால் ஏற்பட்படப்போகும் பின்விளைவுகளை ராஜீவ் காந்தி நிச்சயம் புரிந்துக்கொண்டிருக்கவேண்டும். எனவே அங்கு நடந்த கொலைகள் கற்பழிப்புக்கள் அனைத்துக்கும் இந்திய அரச நிர்வாகம்தான் பொறுப்பெடுக்கவேண்டும்.

இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அவலங்களை நேரடியாக அனுபவித்தவன் என்றாலும் அதற்காக அந்த இராணுவத்தினரை குற்றம் சாட்டுவதற்கு அப்பால் அதன் நிர்வாகத்தின் தவறான அணுகுமுறையை குற்றம்சாட்டுவதுதான் பொருத்தமானதாக இருக்கும். ஏனென்றால் எங்களுக்கு பாதுகாப்புக்காக அமைதியை நிலைநாட்டுவதற்காக வந்த அவர்களை கொலைகாரர்களாகவும் கொடூரமானவர்களாகவும் மாற்றியது இந்திய அரச நிர்வாகமே.ஓரு போரில் ஓரிரண்டு சம்பவங்கள் நடந்தால் அதில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை குற்றம் சாட்டலாம். ஆனால் ஒரு மாபெரும் மனித அவலம் நடக்கும்போது அதற்கு பொறுப்பானவர்களே குற்றவாளிகள் ஆகிறார்கள்.

பேச்சுவார்த்தையின்போது தங்களுடன் இணக்கத்துக்கு வராதபோது அதனால் கொதிப்படைந்த இந்திய ராஜதந்திரியால், பேச்சுவார்த்தையின் போதே பிரபாகரன் அவர்களை சுட்டுக்கொல்லும்படி உத்தரவு பிறப்பிக்க முடியுமென்றால் அதன் பின்புலத்தில் அப்போதைய இந்திய அரசின் அணுகுமுறையை பார்ப்பதே அதன் தொடர்நிகழ்வுகளின் சரிபிழைகளை ஆராய்வதற்கு பொருத்தமாக இருக்கும்


தாங்கள் எங்கே தவறு விட்டிருக்கிறோம் என்பதை புலிகளும் இந்தியாவும் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் எவ்வாறு பழைய கசப்பான சம்பவங்களை மறந்துவிட்டு முன்னோக்கி செல்வது என்பதுவே இரண்டு தரப்புக்கும் உள்ள தற்போதைய இறுகிப்போன நிலையாகும். எப்படியிருந்தபோதும் பழையவற்றை களைந்து புதியவற்றை ஏற்றுக்கொள்வதே ஆரோக்கியமான உறவுநிறையை ஏற்படுத்திக்கொள்வதே இந்தியாவுக்கும் புலிகளுக்கும் உள்ள இடைநிலையாக இருக்கமுடியும்.



கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோ இணைப்பு இவ்விடயம் சம்பந்தமான பலரது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறது.
STANDBY="Loading Windows Media Player components..." TYPE="application/x-oleobject">




WIDTH="320" HEIGHT="290" ShowControls="1" ShowStatusBar="1" ShowDisplay="0" autostart="1">



இன்னும் சில இணைப்புக்கள்:

http://www.ibnlive.com/news/secret-of-rajivprabhakaran-meet/14464-3.html

http://www.ibnlive.com/news/secret-of-rajivprabhakaran-meet/14464-3-1.html

http://www.ibnlive.com/news/recruited-by-raw-trained-by-army-ltte/14462-3-1.html

http://www.rediff.com/news/2000/mar/31lanka.htm