இந்தியாவுக்கும் தமிழீழத்துக்குமான தொடர்பானது தனியே ஒரு சில மனிதர்களால் நிர்ணயிக்கப்படுவதல்ல. மாறாக அதுவொரு நெருங்கிய உறவுநிலையின் பிணைப்பாகவே இருந்துவந்திருக்கிறது. அதனால்தான் இந்தியாவுக்கும் புலிகளுக்கும் போர் ஏற்பட்டபோது கூட தாங்கள் இந்தியர்கள் என்ற நிலைக்கு அப்பாலிருந்து ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்தலைவர்களும் தமிழக மக்களும் ஆதரவாக இருந்தார்கள். இந்திய இராணுவம் தமிழீழத்திலிருந்து வெளியேறியபோது இந்திய இராணுவத்தை வரவேற்க கலைஞர் கருணாநிதி அவர்கள் சென்றிருக்கவில்லை. அதேநேரத்தில் ஈழத்தில் காயப்பட்ட போராளிகளுக்கு மருத்துவவசதிகளுகம் இன்னும் பல வசதிகளும் அந்த போர்நேரத்திலும் இருக்கவே செய்தன.
இந்திய-தமிழீழ யுத்தத்தை உருவாக்குவதில் பெரிதும் காரணியான ஜேஎன் டிக்சிற் அவர்கள் ஒருகட்டத்தில் பேச்சுவார்த்தைகளுக்காக இந்தியப்படையினரின் முகாமுக்கு வந்திருந்த பிரபாகரன் அவர்களை உள்ளடக்கிய குழுவினரை சுட்டுக்கொல்லும்படி இந்திய இராணுவத்தளபதிகளுக்கு கூறினாராம். ஒரு இராஜதந்திரபணியில் ஈடுபட்ட டிக்சிற்றே கொடுமையான உத்தரவை பிறப்பித்தபோதும் அந்த இந்திய தளபதிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கான பிரதான காரணம், அந்த இந்திய தளபதிகள் புலிகள்மேல் வைத்திருந்த தனிப்பட்ட அபிமானமாகும்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்கும் எந்த இராணுவ தளபதியும் அவருக்கு இராணுவ மரியாதை செலுத்த தவறுவதில்லை. அதேபோல விடுதலைப்புலிகளின் தளபதிகளோடும் நல்ல உறவுநிலையே பேணினார்கள். இந்திய இராணுவத்தினர் வீதிகளில் வாகனங்களில் செல்லும்போது எமது மக்கள் அவர்களுக்கு கையசைத்து தமது அன்பை பரிமாறிக்கொள்வார்கள்.
அனைத்துமே தீடிரென ஆட்டம் கண்டது எவ்வாறு?
தியாகி திலீபன் நீர் கூட அருந்தாது ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு உண்ணாவிரதம் இருந்தார். மிகவும் அடிப்படையான மனிதாபிமான அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதத்தை மக்கள்முன் வழங்க ஜேஎன் டிக்சிற் மறுத்தார். அதன்விளைவாக தியாகி திலீபன் தியாகமரணமடைந்தார். பின்னர் புலிகளின் முக்கிய தளபதிகள் சிங்கள படைகளால் கைதுசெய்யப்பட்டபோது அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கவேண்டிய இந்திய அரசு சிங்கள அரசின் கடுமையான நிலைப்பாட்டால் பின்வாங்கியது. பன்னிரண்டு புலிகளின் தளபதிகள் கொல்லப்பட்டார்கள். அத்தோடு இந்திய உளவுத்துறை புலிகளை அழிப்பதற்காக புலி எதிர்ப்பு இயக்கங்களை வளர்க்க தொடங்கியிருந்தது. இதனை அப்போதைய இந்திய தளபதிகள் நன்கு அறிந்திருந்தார்கள்.
இந்திய இராணுவத்தினரும் அவரகளின் தளபதிகளும் இன்னொரு யுத்தம் ஏற்படும் என நினைத்திருக்கவில்லை. ஆனால் இந்திய உளவுத்துறை இந்திய பிராந்திய வல்லாதிக்க நலன்களுக்காக ஒரு யுத்தநிநையை ஏற்படுத்தியது. அதேவேளை இந்திய நடுவண் அரசின் ராஜதந்திரிகளின் அண்ணன் நிலை மனோபாவத்தால் எல்லாமே தலைகீழாக மாற்றப்பட்டன.
தனிமனித உறவுகளும் தனித்தேசியஇனத்தின் கொள்கை ரீதியான நிலைப்பாடுகளும் வெவ்வேறானவை. ஒரு தேசிய இனத்தின் விருப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய பக்குவம் இருக்கவேண்டும். ஒரு சுதந்திரபோராட்டத்தை தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று சிந்தித்தித்திருக்க வேண்டும். அப்போது இந்தியப்பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மை இந்திய- தமிழீழ யுத்தத்தை உருவாக்கியது. அயல்நாட்டுக்கு சென்று போரில் ஈடுபட்டால் ஏற்பட்படப்போகும் பின்விளைவுகளை ராஜீவ் காந்தி நிச்சயம் புரிந்துக்கொண்டிருக்கவேண்டும். எனவே அங்கு நடந்த கொலைகள் கற்பழிப்புக்கள் அனைத்துக்கும் இந்திய அரச நிர்வாகம்தான் பொறுப்பெடுக்கவேண்டும்.
இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அவலங்களை நேரடியாக அனுபவித்தவன் என்றாலும் அதற்காக அந்த இராணுவத்தினரை குற்றம் சாட்டுவதற்கு அப்பால் அதன் நிர்வாகத்தின் தவறான அணுகுமுறையை குற்றம்சாட்டுவதுதான் பொருத்தமானதாக இருக்கும். ஏனென்றால் எங்களுக்கு பாதுகாப்புக்காக அமைதியை நிலைநாட்டுவதற்காக வந்த அவர்களை கொலைகாரர்களாகவும் கொடூரமானவர்களாகவும் மாற்றியது இந்திய அரச நிர்வாகமே.ஓரு போரில் ஓரிரண்டு சம்பவங்கள் நடந்தால் அதில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை குற்றம் சாட்டலாம். ஆனால் ஒரு மாபெரும் மனித அவலம் நடக்கும்போது அதற்கு பொறுப்பானவர்களே குற்றவாளிகள் ஆகிறார்கள்.
பேச்சுவார்த்தையின்போது தங்களுடன் இணக்கத்துக்கு வராதபோது அதனால் கொதிப்படைந்த இந்திய ராஜதந்திரியால், பேச்சுவார்த்தையின் போதே பிரபாகரன் அவர்களை சுட்டுக்கொல்லும்படி உத்தரவு பிறப்பிக்க முடியுமென்றால் அதன் பின்புலத்தில் அப்போதைய இந்திய அரசின் அணுகுமுறையை பார்ப்பதே அதன் தொடர்நிகழ்வுகளின் சரிபிழைகளை ஆராய்வதற்கு பொருத்தமாக இருக்கும்
தாங்கள் எங்கே தவறு விட்டிருக்கிறோம் என்பதை புலிகளும் இந்தியாவும் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் எவ்வாறு பழைய கசப்பான சம்பவங்களை மறந்துவிட்டு முன்னோக்கி செல்வது என்பதுவே இரண்டு தரப்புக்கும் உள்ள தற்போதைய இறுகிப்போன நிலையாகும். எப்படியிருந்தபோதும் பழையவற்றை களைந்து புதியவற்றை ஏற்றுக்கொள்வதே ஆரோக்கியமான உறவுநிறையை ஏற்படுத்திக்கொள்வதே இந்தியாவுக்கும் புலிகளுக்கும் உள்ள இடைநிலையாக இருக்கமுடியும்.
கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோ இணைப்பு இவ்விடயம் சம்பந்தமான பலரது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறது.
//பேச்சுவார்த்தையின்போது தங்களுடன் இணக்கத்துக்கு வராதபோது அதனால் கொதிப்படைந்த இந்திய ராஜதந்திரியால், பேச்சுவார்த்தையின் போதே பிரபாகரன் அவர்களை சுட்டுக்கொல்லும்படி உத்தரவு பிறப்பிக்க முடியுமென்றால் அதன் பின்புலத்தில் அப்போதைய இந்திய அரசின் அணுகுமுறையை பார்ப்பதே அதன் தொடர்நிகழ்வுகளின் சரிபிழைகளை ஆராய்வதற்கு பொருத்தமாக இருக்கும்.//
நியாயமான கருத்துக்கள். சரி பிழைகள் இரண்டு தரப்பிலும் உள்ளன.
//இந்திய இராணுவத்தினர் வீதிகளில் வாகனங்களில் செல்லும்போது எமது மக்கள் அவர்களுக்கு கையசைத்து தமது அன்பை பரிமாறிக்கொள்வார்கள். அனைத்துமே தீடிரென ஆட்டம் கண்டது எவ்வாறு? //
[1]J.R.ஜெயவர்தனாவின் அரசியல் அனுபவம், இராஜதந்திரம் போன்றவற்றிற்கு சிக்குண்ட அனுபவமற்ற இந்திய அரசு
[2]தீக்சித் அவர்களின் முரட்டுப்பிடிவாதப் போக்கு, மற்றும் எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் பாணியில் எடுத்த நடவடிக்கைகள்
[3]இந்திய அரசு விடுதலைப் புலிகளின் மன உறுதி, மக்கள் பலம், இராணுவ பலம் போன்றவற்றை சரியாகக் கணிப்பிடாதது
[4]பிரச்சனையில் சம்மந்தப்பட்ட ஒர் தரப்புடன்[சிங்கள] மட்டும் பிரச்சனைகளை விவாத்திது விட்டு, தமிழர் தரப்புடன் பிரச்சனைகள் பற்றியோ தீர்வு பற்றியோ ஒரு வார்த்தை கூட பேசாதது
[5]தாங்கள் என்ன சொன்னாலும் ஈழத்தமிழர்களின் தன்னிகரற்ற தலைவனான வேலுப்பிள்ளை பிரபாகரன் தலையாட்டி தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றாத தீர்வு என்றாலும் ஏற்றுக் கொள்வார் என இந்திய அரசு தவறாகக் கணிப்பிட்டது
[6]அன்னை இந்திரா காந்தி அம்மையார் ஈழப்பிரச்சனையைக் கையாளும் போது ஈழப்பிரச்சனையில் அனுபவமும் , அப்பிரச்சனை பற்றிய அறிவு, அரசியல் இராஜதந்திரம் தெரிந்த பல இராஜதந்திரிகளை [வெங்கட்ராமன், பார்த்தசாரதி, நரசிம்மராவ்]தன் வசம் வைத்திருந்தது போல் இராஜீவ் காந்தி வைத்திருக்காதது..
இப்படிப் பல காரணங்களை அடுக்கிக் கொண்டு போகலம், ஏன் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு எதிராகத் திரும்பியது என்ற வினாவுக்கு. எனினும் நீங்கள் சொன்னது போல் இரு தரப்பும் கடந்த கால வரலாற்றிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் கற்றுக் கொண்டு மறப்போம் மன்னிப்போம் என்று செயற்படுவது தான் நீங்கள் குறிப்பிட்டது போல் சாலச் சிறந்தது.
Good article.Your detail article give more light on the debacle of Indian Diplomacy.No point in harping on past misdeed. It is always the right thing to move on to mend relation with Eelam. Whether India Approve or not Eelams Independance is going to be a reality.Only a matter of time.
வருகைதந்து கருத்துக்களை குறிப்பிட்ட வெற்றி மற்றும் காரைவாசன்( சரியாக உச்சரித்திருக்கிறேன் என நம்புகிறேன்) மற்றும் அனானி ஆகியோருக்கு நன்றிகள்.
வெற்றி, காரைவாசன் இருவரும் குறிப்பிட்ட சரியானதுதான். அண்மையில் ஜோர்ஜ் புஸ் அவர்கள் கூட உரையாற்றும்போது விடுதலைப்போராட்டங்களுக்கு அழுத்தங்களை போடுவதன்மூலம் அதனுடைய இலக்கை சிறிது காலத்துக்கு தள்ளிப்போடலாம். ஆனால் அவர்களது பயணத்தை தடுத்து நிறுத்தமுடியாது என குறிப்பிட்டிருந்தார்.
நான் பெரியவன் சிறியவன் என்ற மனப்பாங்கிலிருந்து விடுபட்டு அடுத்தவர்களுடைய அபிலாசைகளுக்கும் மதிப்பு கொடுக்கும்போதே எல்லோரும் உயர்வடைவார்கள்.
மேலும் நீங்கள் தற்போது இந்தியாவின் இக்கட்டான சூழ்நிலைகுறித்து வருத்தப்படுகிறீர்களா என ஜேஎன் டிக்சிற்றிடம் கேட்டபோது நிச்சயமாக இல்லை. சில விடயங்களின் சரிபிழைகளை 10 வருடங்களுக்கு பின் விவாதிப்பது சரியானதல்ல. ஒவ்வொரு நிகழ்வுகளின் சரிபிழைகளை அந்தக்கால கட்டத்தில் சரியா பிழையா என பார்க்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
அக்கருத்து மிகச்சரியானதாகும். ஏறத்தாழ 15 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் புதிய அணுகுமுறைகளோடு பயணிப்பதே அனைவருக்கும் நன்னை பயக்கும்.
உங்களின் வலைப்பூ மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. நீங்கள் அனுமதியளிப்பின் உங்களின் பதிவுகள் சிலவற்றினை எமது செய்தித் தளமாகிய "ஒரு தகவல்" இல் வெளியிட ஆவலாக இருக்கிறேன். முடியுமாயின் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும். vikramloma@gmail.com
5 Comments:
நியாயமான கருத்துக்கள். சரி பிழைகள் இரண்டு தரப்பிலும் உள்ளன.
By
Anonymous, at Wednesday, July 05, 2006 2:22:00 AM
//இந்திய இராணுவத்தினர் வீதிகளில் வாகனங்களில் செல்லும்போது எமது மக்கள் அவர்களுக்கு கையசைத்து தமது அன்பை பரிமாறிக்கொள்வார்கள்.
அனைத்துமே தீடிரென ஆட்டம் கண்டது எவ்வாறு? //
[1]J.R.ஜெயவர்தனாவின் அரசியல் அனுபவம், இராஜதந்திரம் போன்றவற்றிற்கு சிக்குண்ட அனுபவமற்ற இந்திய அரசு
[2]தீக்சித் அவர்களின் முரட்டுப்பிடிவாதப் போக்கு, மற்றும் எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் பாணியில் எடுத்த நடவடிக்கைகள்
[3]இந்திய அரசு விடுதலைப் புலிகளின் மன உறுதி, மக்கள் பலம், இராணுவ பலம் போன்றவற்றை சரியாகக் கணிப்பிடாதது
[4]பிரச்சனையில் சம்மந்தப்பட்ட ஒர் தரப்புடன்[சிங்கள] மட்டும் பிரச்சனைகளை விவாத்திது விட்டு, தமிழர் தரப்புடன் பிரச்சனைகள் பற்றியோ தீர்வு பற்றியோ ஒரு வார்த்தை கூட பேசாதது
[5]தாங்கள் என்ன சொன்னாலும் ஈழத்தமிழர்களின் தன்னிகரற்ற தலைவனான வேலுப்பிள்ளை பிரபாகரன் தலையாட்டி தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றாத தீர்வு என்றாலும் ஏற்றுக் கொள்வார் என இந்திய அரசு தவறாகக் கணிப்பிட்டது
[6]அன்னை இந்திரா காந்தி அம்மையார் ஈழப்பிரச்சனையைக் கையாளும் போது ஈழப்பிரச்சனையில் அனுபவமும் , அப்பிரச்சனை பற்றிய அறிவு, அரசியல் இராஜதந்திரம் தெரிந்த பல இராஜதந்திரிகளை [வெங்கட்ராமன், பார்த்தசாரதி, நரசிம்மராவ்]தன் வசம் வைத்திருந்தது போல் இராஜீவ் காந்தி வைத்திருக்காதது..
இப்படிப் பல காரணங்களை அடுக்கிக் கொண்டு போகலம், ஏன் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு எதிராகத் திரும்பியது என்ற வினாவுக்கு. எனினும் நீங்கள் சொன்னது போல் இரு தரப்பும் கடந்த கால வரலாற்றிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் கற்றுக் கொண்டு மறப்போம் மன்னிப்போம் என்று செயற்படுவது தான் நீங்கள் குறிப்பிட்டது போல் சாலச் சிறந்தது.
By
வெற்றி, at Wednesday, July 05, 2006 3:34:00 AM
to mend relation with Eelam. Whether India Approve or not Eelams Independance is going to be a reality.Only a matter of time.
By
Anonymous, at Wednesday, July 05, 2006 9:19:00 AM
வெற்றி, காரைவாசன் இருவரும் குறிப்பிட்ட சரியானதுதான். அண்மையில் ஜோர்ஜ் புஸ் அவர்கள் கூட உரையாற்றும்போது விடுதலைப்போராட்டங்களுக்கு அழுத்தங்களை போடுவதன்மூலம் அதனுடைய இலக்கை சிறிது காலத்துக்கு தள்ளிப்போடலாம். ஆனால் அவர்களது பயணத்தை தடுத்து நிறுத்தமுடியாது என குறிப்பிட்டிருந்தார்.
நான் பெரியவன் சிறியவன் என்ற மனப்பாங்கிலிருந்து விடுபட்டு அடுத்தவர்களுடைய அபிலாசைகளுக்கும் மதிப்பு கொடுக்கும்போதே எல்லோரும் உயர்வடைவார்கள்.
மேலும் நீங்கள் தற்போது இந்தியாவின் இக்கட்டான சூழ்நிலைகுறித்து வருத்தப்படுகிறீர்களா என ஜேஎன் டிக்சிற்றிடம் கேட்டபோது நிச்சயமாக இல்லை. சில விடயங்களின் சரிபிழைகளை 10 வருடங்களுக்கு பின் விவாதிப்பது சரியானதல்ல. ஒவ்வொரு நிகழ்வுகளின் சரிபிழைகளை அந்தக்கால கட்டத்தில் சரியா பிழையா என பார்க்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
அக்கருத்து மிகச்சரியானதாகும். ஏறத்தாழ 15 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் புதிய அணுகுமுறைகளோடு பயணிப்பதே அனைவருக்கும் நன்னை பயக்கும்.
By
thamillvaanan, at Wednesday, July 05, 2006 11:48:00 AM
vikramloma@gmail.com
By
Anonymous, at Sunday, May 20, 2007 11:37:00 AM
Post a Comment
<< Home