<BODY><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9107255\x26blogName\x3d%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thamilsangamam.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thamilsangamam.blogspot.com/\x26vt\x3d-4696126665130882971', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
   
எதிரொலி
எதிரொளி
முன்னைய பதிவுகள்
தொகுப்பு
உங்கள் வரவுகள்

To see all visitor details
நன்றிகள்

Powered by Blogger
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
»--------»

மீண்டும் ஒரு சமாதானகாலம்?
இன்று தமிழீழ நடைமுறை அரசின் தலைநகரில் நடைபெற்ற முக்கியத்துவமான சந்திப்புக்களை தொடர்ந்து, அடுத்த மாதம் சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் சுவிஸ்லாந்து நாட்டில் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு இணங்கியுள்ளனர். சிறிலங்கா அரசு தான் பேச்சுவார்த்தைக்கு ஆதரவானதாக காட்டிக்கொண்டு விடுதலைப்புலிகளை எப்படியாவது ஐரோப்பாவில் தடைசெய்வதற்கான சதியை அரங்கேற்றிக்கொண்டிருந்தது. அதனை உணர்ந்துகொண்ட புலிகள் நோர்வேயில் தான் பேசவேண்டும் என பிடிவாதமாக இருந்தனர். தற்போது நோர்வே அரசின் சிபார்சுக்கு அமைய இரண்டு தரப்புகளும் அமைதி சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக சுவிசில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இணங்கியுள்ளன.


ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் இடம்பெபயர்ந்த நிலையில், தமிழ்நாடு நோக்கியும் அகதிகளாக மக்கள் இடம்பெயரும் நிலையிலும் மீண்டும் சமாதானத்துக்கான நம்பிக்கை ஒளி தென்படுவது ஆறுதல் அளிக்கிறது.

இன்றைய சந்திப்பின்போது அரச படைகளினினாலும் அதன் ஆதரவு துணைப்படைகளாலும் மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என விடுதலைப்புலிகளின் தலைவரால் உறுதியாக தெரிவிக்கப்பட்டிருப்பதாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ்மக்கள் மீது நடாத்தப்படும் கொலைவெறித் தாக்குதல்களையும், இலங்கைத்தீவின் எப்பகுதியிலேனும் தேடுதல் என்ற பெயரில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தவேண்டும் எனவும் அப்போதுதான் பேச்சுவார்ததைகளில் பங்கேற்க முடியும் என தெளிவாக தெவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.




விடுதலைப்புலிகள் எந்தவிதமான வன்முறைகளிலும் ஈடுபடமாட்டோம் என இன்றைய சந்திப்பில் உறுதி அளித்துள்ளனர். அவ்வாறான உறுதிமொழியை அளிக்ககூடிய நிலையில் சிறிலங்காவின் நிறைவேற்று அதிகார சனாதிபதி அவர்கள் இருக்கிறாரா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

படங்கள் உதவி சங்கதி

0 Comments:

Post a Comment

<< Home