|
இது வைகோவின் குரல்
|
பலாலி சிறிலங்கா இராணுவ விமான தளத்தைச் சீரமைக்க இந்திய அரசாங்கம் உதவினால் தமிழ்நாடு காஸ்மீராகும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
ஈரோட்டில் கடந்த திங்கட்கிழமை பேராசிரியர் சு.ப. வீரபாண்டியனின் "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்" நூலை வெளியிட்டு வைகோ பேசியதாவது:
பழங்காலத்தில் இருந்தே ஈழத்தில் தமிழர்கள் தனி இனமாக வாழ்ந்ததற்கு சான்று உள்ளது. சிங்கள மொழி பிரதானப்படுத்தப்பட்டபோது தான் தனி ஈழப்பிரச்சினை எழுந்தது. தனி ஈழம் அமைப்பது தான் இலங்கைப் பிரச்சினைக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும்.
இந்தியா-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தாக இருந்தபோது அதற்கு எதிராக பிரதமர், சோனியா காந்தி, பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரிடம் பேசினேன். அதையடுத்து ஒப்பந்தம் கைவிடப்பட்டது.
இப்போது சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை இந்தியா உதவியுடன் சீரமைத்து வருவதாக சிறிலங்கா விமானப்படை தளபதி டொனால்ட் பெரேரா கூறியுள்ளார். இந்திய அதிகாரிகள் விரைவில் பார்வையிட வர இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பலாலி விமானதளத்தைப் பயன்படுத்தி தமிழர்களை சிறிலங்கா இராணுவம் கொன்றது. எனவே இந்த விமானதளம் சீரமைக்கப்பட்டால் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்படும். தமிழர்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி தமிழர்கள் அழிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சிறிலங்கா இராணுவத்துக்கு ஏற்கெனவே இந்தியா உதவி செய்துள்ளது. மீண்டும் இதுபோல இந்தியா அந்த நாட்டு இராணுவத்துக்கு உதவக்கூடாது.
இலங்கையிலே போர் மேகம் சூழ்ந்திருப்பதாக பத்திரிகை செய்திகள் வெளியாகின்றன.
சிறிலங்காவுக்கு உதவி செய்யும் முடிவை பிரதமர் மன்மோகன் சிங் எடுக்கமாட்டார். ஆனால் ஒரு சில இந்திய அதிகாரிகள், சிறிலங்காவுக்கு உதவ தயாராக இருப்பதாக எனக்குத் தகவல் வந்துள்ளது.
அந்த அதிகாரிகளுக்குச் சென்றடையும் வகையில் நான் சொல்வதை இங்கே உள்ள உளவுத்துறையினர் கவனமாகக் குறிப்பெடுத்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எங்களுக்கு வன்முறை மீது நம்பிக்கை இல்லை. ஆனால் சிறிலங்காவுக்கு நீங்கள் உதவி செய்தால் எங்கள் தமிழ்நாட்டு இளைஞர்களைக் கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாடு இன்னொரு காஸ்மீரமாகிவிடும். இதை அப்படியே அந்த அதிகாரிகளுக்குச் சென்றடையுமாறு குறிப்பெடுத்து அனுப்புங்கள்.
இந்தியா என்பது நாடு அல்ல உபகண்டம். இக்கருத்தை நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளேன். தேசிய மொழிகள் பட்டியலில் தமிழ் இல்லையென்றாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை ஏற்றுக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் தமிழுக்கு ஆபத்து வந்தால் தேசிய இனத்தின் உரிமைக்காக போராட வேண்டிய சூழல் உருவாகும்.
மதத்தால் பாகிஸ்தானும், இனத்தால் அயர்லாந்தும், மொழியால் வங்காளதேசமும் பிரிந்தது. அப்படியொரு நிலை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது.
இந்தக் கருத்து அவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்றார் வைகோ.
இந்த நிகழ்ச்சியில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன், திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல் புதினம்
|
|
|
|
29 Comments:
நல்லதொரு பதிவு, பதிவுக்கு வாழ்த்துக்கள், இப்படியானவர்கள்தான் எமக்கு தேவை.
22.12.2006 அன்று 2.42 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Thursday, December 22, 2005 7:44:00 AM
It's true. but i won't think TN will go that extent. but surely if Govt. of India take such steps it will spoil TN.
22.12.2005 அன்று 3.55 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Thursday, December 22, 2005 8:58:00 AM
+குறி போடுவதைத்தவிர, வேறு கருத்தெல்லாம் சொல்லத்தெரியவில்லை.பதிவுக்கு நன்றி,பூங்குழலி
22.12.2005 அன்று 7.23 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Thursday, December 22, 2005 12:30:00 PM
காஷ்மீர் எல்லாம் அகாது.
மிஞ்சி போனால் ம.தி.மு.க ஆர்பாட்டம் நடத்தும்.
தமிழ் நாட்டில் பெரும்பாலானோர் ஈழ விடயத்தில் பெரிதாக அக்கறை எடுத்துகொள்ளவில்லை என்பதுதான் நிஜம் இல்லாவிட்டால் இந்த வைகோ எப்போதோ முதல்வர் அகியிருக்க வேண்டும்.
22.12.2005 அன்று 7.46 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Thursday, December 22, 2005 12:50:00 PM
Thirundhave maatnungala
22.12.2005 அன்று 8.13 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Thursday, December 22, 2005 1:17:00 PM
வைக்கோ முதலில் தான் ஒரு இந்தியர் என்பதை மனதில் கொண்டு பேசவேண்டுமென்பது என் கருத்து.ஈழத்தமிழர் மீது நம் அனைவருக்கும் பரிவும்,அனுசரனையும் இருக்கிறது.அதற்காக தாய்த்திருநாட்டின் இறையான்மையில் கை வைக்கும் விதமாக பேசுவது ஏற்கத்தக்கதல்ல.
கலைஞருக்கு பின் தமிழகத்தை வழிநடத்த தகுதியான தலைவர் என்கிற தகுதியை தன் வாயாலே கெடுத்துக்கொண்டு விட்ட துரதிர்ஷ்டசாலி.இனியாவது தான் சார்ந்த மண்ணுக்கும்,மக்களுக்கும் உண்மையாய் நடப்பாரா?
22.12.2005 அன்று 7.53 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Thursday, December 22, 2005 1:21:00 PM
//இந்தியா என்பது நாடு அல்ல உபகண்டம். இக்கருத்தை நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளேன். தேசிய மொழிகள் பட்டியலில் தமிழ் இல்லையென்றாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை ஏற்றுக் கொள்கிறேன்//
சதயம் தேசிய மயக்கத்தில் இருக்கீறீர்கள். இந்தியா என்ற அமைப்பு மிகச் சமீபத்தில் வந்ததே. அதற்கு முன்பே தனி தேசிய இனமாக இருந்தது தமிழ் இனம்.
நாம் முதலில் தமிழன். பின்பு இந்தியன்.
தமிழன் அழிவதற்கு துணை போவதுதான் இந்திய இறையாண்மையா? அதற்கு அடிபணிந்து தமிழன் வாழ வேண்டுமா.. வெட்கமாக இல்லை? தமிழனுடைய குரல்கள் ஓங்கி ஒலித்தால் இலங்கை அரசுக்கு உதவ இந்தியா ஆட்சியாளர்களுக்கு எப்படி தைரியம் வரும்?.
22.12.2005 அன்று 8.25 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Thursday, December 22, 2005 1:39:00 PM
வைகோ உண்மையில் ஒரு இந்திய தேசப்பற்றாளன். அதனால்தான் இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று வந்தபோது கொடுமையான பொடா சட்டத்தைக்கூட முறைப்படுத்துவதில் முன்நின்றார். ஆனால் அதே பொடா சட்டமே அவருக்கும் விலங்கானதும் வரலாற்றின் பக்கங்கள். அதேவேளை மொழியால் ஒன்றுபட்ட, வரலாற்றால் பிணைக்கப்பட்ட இன்னொரு தேசமக்கள் தன்னுடைய தேசத்தால் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் என அவர் கருதினால், அதற்கும் அவரது தேசப்பற்றுக்கும் முடிச்சுப்போடுவது பொருத்தமானதல்ல.
எப்படியான அரசியல் புரளிகள் இந்தியாவில் நடந்தாலும், இந்திய தேசத்தின் அரசியல் என்பதும் இந்திய மக்களின் மனோபாவமும் முதிர்ச்சியடைந்தது. பல்லின மத கூறுகளை அரவணைத்து செல்லகூடியது. அன்னியதேசத்து பெண்மணியை கூட தனது நாட்டின் பிரதமராக ஏற்றுக்கொள்ளகூடிய அரசியல் நாகரிகம் கொண்டது.
ஆனால் சிங்களதேசம் அப்படியானதல்ல. அது கற்பனையான வரலாற்றுக் கோட்பாடுகளுக்கும் தீவிர மதவாதத்துக்கும் அடிமையானது. சிங்களதேசத்திடமிருந்து கௌரவமான தீர்வு தமிழர்களுக்கு கிடைக்கபோவதில்லை. அத்தமிழர்களுக்காக குரல்கொடுப்பது இன்னொரு பிரிவினையை இந்தியாவில் ஏற்படுத்தும் என்பதும் தவறானது.
எனவே தமிழனாக இருப்போம். தமிழனாய் இருப்பவனை போற்றுவோம்.
அன்புடன்
தமிழ்வாணன்
22.12.2005 அன்று 9.03 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Thursday, December 22, 2005 2:05:00 PM
வணக்கம் சத்யம்
ஒருவர் தான் யாரை சார்ந்தவர் என்று சொல்லிக்கொள்வதை நிர்ணயிப்பவை பல காரணிகள். ஆனால் அவற்றை சொல்லிக்கொள்ளமுற்பட்டு அது தவறாக விளங்கிக்கொள்ளப்படவும் கூடும். அதனால் அதனை தவிர்க்க முயல்கிறேன்.
என்னுடன் இங்கிலாந்து நண்பர் ஒருவர் அறிமுகம் செய்து கொண்டபோது நீங்கள் இங்கிலாந்து நாட்டவரா என கேட்டேன். அப்போது அவர் சொன்னார். நான் வேல்ஸ்நாட்டை சேர்ந்தவன் என்று சொல்வதையே விரும்புகிறேன் என்றார்.
எனவே இவைதான் நீங்கள் யாரென்பதை தீர்மானிப்பது என உறுதியாக சொல்லமுடியாது.
அது உங்களை பொறுத்தது.
22.12.2005 அன்று 10.29 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Thursday, December 22, 2005 3:30:00 PM
இப்படியே எழுதிகோண்டு இருங்க, தமிழ் நாட்டுல இருக்குர கொஞச அதரவும் அம்போ அயிடும்!
இங்க 6 கோடி பேரும் "தேசிய மயக்கத்தில்" தான் இருக்கோம்!
//இந்தியா என்ற அமைப்பு மிகச் சமீபத்தில் வந்ததே.
மஹாபாரதம்.
மஹா"பாரதம்"
The idea of India has existed for a few thousand years.Thank you.
சிங்கள ரானுவத்தின் கொடுமைகளை நன்பர் ஒருவரின் மலைநாட்டு தமிழ் உறவினர் முலம் அறிந்தே உள்ளேன்.
அனால் இப்படி இந்தியாவை பற்றி எழுதுவதால் என்னை போன்று எத்தனை பேரை எமாற்றம் அடைய செய்து ஈழ தமிழரை மற்றி மோசமான என்னம் எற்பட உதவ போகிறார்கள் ?
தமிழ்மனத்தில் எழுதும் பலரும் செய்யும் தவறான செயல் இது.என்ன எழுதுகிறோம், அதனால் அதை படிப்பவரின் மனதில் என்ன என்னங்கள்உண்டாகும் என்று யோசித்து எழுதுங்கள்!
By
Anonymous, at Thursday, December 22, 2005 7:29:00 PM
மஹா"பாரதம்"
The idea of India has existed for a few thousand years.Thank you.//
The idea of India existed from when onwards?.
from the time of aryans arrival?
The Tamils existed even before the aryans- allover india.
Please read some real history books other than the school text books.
மஹாபாரதத்திலே பல தேச இனங்களை குறிப்பிட்டதே அன்றி ஒரே தேசியத்தை குறிக்கவில்லை. நேரம் கிடைத்தால் குருசேத்ரத்திர அணி திரண்ட தேசங்களின் எண்ணிக்கையை படித்து பாருங்கள். இந்த பல தேசங்களை ஒருங்கிணைத்தது ஆங்கிலேயர்களின் ஆதிக்கம். ஆங்கில ஆதிக்கம் நிலவிய போதும் அவர்களுடன் இணக்கமாக தனி தேசமாக ஆட்சி புரிந்த தேசங்கள் உண்டு. மைசூர் சம்ஸ்தானம், திருவிதாங்கூர், குவாலியர், ஹைதராபாத் என அடுக்கி கொண்டே போகலாம். ஆங்கிலேயர்கள் விடுதலை கொடுத்த பொழுது இந்த தேசங்கள் தங்கள் விருப்பப்படி இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ அல்லதோ தனித்தோ இயங்கி கொள்ளலாம் என்றுதான்..
இந்த பல்வேறு தேசங்களையும் பல வகை உத்திகளின் வாயிலாக ஒருங்கிணைத்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல் என்ற இந்தியாவின் இரும்பு மனிதர்!(?). இப்படியாக இந்தியாவாக உருவாக்கப்பட்ட பல்வேறு தேசங்களை அரசியல் சாசனத்தின் படி Indian Union என்றுதான் பெயர் வைத்தனர்.
வைத்ததுதான் வைத்தார்கள் அட்டகாசமாக Unites States Of India என்றூ வைத்திருந்தால்
நாமும் கித்தாப்பாக நான் USIகுடிமகன் என்று சொல்லி திரியலாம்....
தமிழ் என்று பேசுவது இந்திய தேசியத்திற்கு எதிரானது என்ற முனை மழுங்கிய உங்கள் வாதங்களை விட்டுத் தள்ளுங்கள்.
நாம் ஒரு கட்டமைப்பில் இருக்கும் போது நமது தரப்பு குரல்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்பதல்ல சமத்துவம். சுப்ரீம் கோர்ட் உத்தரவையே துச்சமென மீறுமளவுக்க கன்னட தேசியம் அதன் மக்களுக்கு தெம்பு கொடுக்கும் போது தமிழ் மட்டும் முணகிக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்ற தங்கள் எண்ணம் தவறானது.
எங்களுக்கு யாரும் தேசபக்தியை கற்றுத்தர வேண்டிய அவசியமில்லை.
உங்கள் அமெரிக்க மனிதாபிமானச் சிந்தனைகளுக்கு வாழ்த்துகள்
By
முத்துகுமரன், at Friday, December 23, 2005 2:12:00 AM
கருத்துக்களை பகிர்ந்துகொண்ட
பிருந்தன்
செந்தில்
பூங்குழலி
ஜிகோ
அடப்பாவி
முத்துக்குமரன்
சத்யம்
சமுத்திரா
ஆகியோருக்கு நன்றிகள்.
23.12.2005 அன்று 6.33 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Friday, December 23, 2005 11:40:00 AM
from the time of aryans arrival?//
Please be advised that there is no scientific evidence to aryan invasion theory.Thank You.
By
Anonymous, at Friday, December 23, 2005 1:38:00 PM
//சிங்கள ரானுவத்தின் கொடுமைகளை நன்பர் ஒருவரின் மலைநாட்டு தமிழ் உறவினர் முலம் அறிந்தே உள்ளேன்.
அனால் இப்படி இந்தியாவை பற்றி எழுதுவதால் என்னை போன்று எத்தனை பேரை எமாற்றம் அடைய செய்து ஈழ தமிழரை மற்றி மோசமான என்னம் எற்பட உதவ போகிறார்கள் ?
தமிழ்மனத்தில் எழுதும் பலரும் செய்யும் தவறான செயல் இது.என்ன எழுதுகிறோம், அதனால் அதை படிப்பவரின் மனதில் என்ன என்னங்கள்உண்டாகும் என்று யோசித்து எழுதுங்கள்!//
இவர்களின் மனங்குளிர, மக்களே பொய்களைப் புனைவீர்.
புகழ்ந்து பாடுவீர். உங்கள் போற்றுதலில்தான், சிங்களவனின் கொடுமையை இவர்கள் நம்புவதும் நம்பாததும் தங்கியுள்ளது. நீங்கள் இப்படி எழுதுவதால் நாட்டாமைகளின் கோபத்துக்கு ஆளாகிறீர்களென்பது உங்களுக்கின்னும் உறைக்கவில்லையா?
23.12.2005 அன்று 9.26 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Friday, December 23, 2005 2:34:00 PM
//Please be advised that there is no scientific evidence to aryan invasion theory.Thank You. //
for the past few years you people have started to float this new theory...suddenly what happened? u stopped thinking that you are different improved breed than others or what?.
23.12.2005 அன்று 9.57 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Friday, December 23, 2005 2:57:00 PM
முத்து,
ஒரே பதில் : டி.என்.ஏ (D.N.A).
இந்தியாவில் உள்ள மக்களில் 97% பேர் ஒரே groupஐ சேர்ந்தவர் என்பது DNA sampling இன் மூலமாக நிருபிக்கபட்டூள்ளது.
Dont you read books at all ?
If you do happened to read, you must have come across this splendid work :
"The real Eve"
by Stephen Oppenheimer
http://www.bradshawfoundation.com/journey/
The book is available in AMAZON.
Go get it.
Ref Page no : 187
The out of Africa Adam, breaks up into 3 paternal lines : YAP, RPSY, and 89
Virtually 97% of Indians are descended from 89.
ஆக உங்கள் பொய்கள் எல்லாம் மலை ஏறி கொஞ்சம் நாள் அச்சு!
பாவம் திராவிடம்!
23.12.2005 அன்று 10.24 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Friday, December 23, 2005 3:38:00 PM
யாரும் சிங்களவரில் கொடுமைகளை மறுக்கவில்லை.
By
Anonymous, at Friday, December 23, 2005 3:39:00 PM
//
According to Independence of India Act (1947) Passed in the House of Commons,Britian the princely states had only two options - Join India or Pakistan.
Get your facts right or stop posting imaginary theories.
By
Anonymous, at Friday, December 23, 2005 3:40:00 PM
சதவீத உண்மையை ஒத்து கொண்டதற்கு நன்றி.......
By
முத்துகுமரன், at Friday, December 23, 2005 3:45:00 PM
thanks samudra for your acceptance...
பாவம் திராவிடம் என்று உரக்க கத்தினால் திராவிடம் பாவமாகிவிடாது....
தமிழ் என்று பேசுவது இந்திய தேசியத்திற்கு எதிரானது என்ற முனை மழுங்கிய உங்கள் வாதங்களை விட்டுத் தள்ளுங்கள்.
அம்மா பெயரை சொல்றதுல கூச்சப்படுகின்றவர்களை திருத்தமுடியாது முத்துக்குமரன்.விட்டிருங்க....
23.12.2005 அன்று 11.19 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Friday, December 23, 2005 4:21:00 PM
giving links is not a big deal take this...i hope you understand tamil...
http://www.keetru.com/anicha/Nov05/marx_9.html
By
Muthu, at Friday, December 23, 2005 4:27:00 PM
முத்து
நான் அறிவியல் பூர்வமான அதாரங்களை அடிப்படையாக கொண்ட ஒரு புத்தகத்தின் பெயரை கூறியுள்ளேன்.அதையும் படித்துவிட்டு பேசவேண்டும்.
சும்மா record player மாதிரி சொன்னதயே திரும்ப திரும்ப சொல்லிகொண்டு இருப்பதால் ஒன்னும் பயனில்லை.
எதேனும் அறிவியல் பூர்வமான அதாரம் இருந்தால் பேசலாம்...சவால்?
By
Anonymous, at Friday, December 23, 2005 7:51:00 PM
என்ன செய்ய, இனி எதாவது anonymous பெயரில் என்னை திட்டி ஒரு நூறு comments வரும்....
By
Anonymous, at Friday, December 23, 2005 7:51:00 PM
samudra,
so you are not going to read the link which i have given..i you want i can give another 100 links like this...
thing is one should use own judgement...donot get fooled by the so called scientific inventions....
go to google..give aryan invasion theory you will millions of sites O.K
24.12.2005 அன்று 4.40 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Saturday, December 24, 2005 9:37:00 AM
What are you going to counter DNA evidence with ?
Come,come...I'm quite anxious to know.
I'm afraid no google reveals any counter to Stephen Oppenheimers, "The Real Eve".
Too bad that the Dravidian imaginary fantasies have to die pretty soon!
By
Anonymous, at Saturday, December 24, 2005 8:06:00 PM
வூடு கட்டுவதை நிறுத்திவிட்டு என்னைக்கு சொந்த சிந்தனையை வளர்த்துக்கொள்ள போகிறீர்களோ அன்னைக்குத்தான் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் நார்மல் ஆக் முடியும்....
நான் சொன்ன உரலை படித்தாயா தம்பி? அதில் பதில்கள் உள்ளன. டி.என்.ஏ கலப்பு இந்தியாவில் இருமுறை ஏற்பட்டுள்ளன என்பதை படித்தாயா?
have you ever heard about romila thapar?Read and come..
அப்படியே வைத்துக்கொண்டாலும் தமிழன் என்று தன்னை உணர உனக்கு ஏன் வெட்கம் தம்பி?
யாரையோ எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு தமிழ் அடையாளத்தை மறுத்துக்கொண்டு அதை மறைப்பதற்காகவே "தேசியம்" பேசுவது தவறு என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
இதுவும் நான் சொன்னது தான்.
26.12.2005 அன்று 3.53 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Monday, December 26, 2005 8:54:00 AM
சமுத்ரா,//What are you going to counter DNA evidence with ?
//உங்களுக்கே இது சிறுபிள்ளைத்தனமாக தோன்றவில்லை?என்னமோ 100 கோடி இந்தியரிடமும்(6 கோடி தமிழர் உட்பட) மரபணு சோதனை நடந்ததாகவும் அதில் வெறும் 3 கோடி பேர் மட்டும் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர் மற்ற 97 கோடி பேர் அனைவரும் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர் என அறிவிலித் தனமாக விளிப்பதை விட்டுவிட்டு உருப்படியான ஆக்கபுர்வமான சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
பிறந்த குழந்தைக்குத் தெரியும் அதனுடய தாய் யார் என்று. ஆகையால் உங்களுடய உப்புசப்பில்லாத வாதத்தை திராவிடர்களிடம் சொல்லாதீர்கள். வேண்டுமானால் உங்களுடைய "origin" - ஐ வேண்டுமானால் நன்றாக ஆராயுங்கள்.
26.12.2005 அன்று 4.59 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
By
Anonymous, at Monday, December 26, 2005 10:19:00 AM
இப்பொழுதுதான் இப்பதிவை பார்த்தேன்.
"எங்கள் தமிழ்நாட்டு இளைஞர்களைக் கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாடு இன்னொரு காஸ்மீரமாகிவிடும்" என்பது பொறுப்பற்ற பேச்சு என்பது என் கருத்து. அதை இங்கு பதிகிறேன்.
By
முகமூடி, at Monday, December 26, 2005 4:27:00 PM
By
Anonymous, at Monday, December 26, 2005 4:44:00 PM
Post a Comment
<< Home