<BODY><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9107255\x26blogName\x3d%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thamilsangamam.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thamilsangamam.blogspot.com/\x26vt\x3d-4696126665130882971', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
   
எதிரொலி
எதிரொளி
முன்னைய பதிவுகள்
தொகுப்பு
உங்கள் வரவுகள்

To see all visitor details
நன்றிகள்

Powered by Blogger
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
»--------»

ஏழு சக மூன்று சமன் ஏழு
எப்படியோ ஒருவாறாக சிறிலங்காவுக்கான சனாதிபதி தெரிவுசெய்யப்பட்டுவிட்டார். வரலாறுகள் புதிதாக எழுதப்படுகின்றன. வெளிப்படையான பார்வைக்கு நல்ல மனிதராக தெரியும் ரணில் விக்கிரமசிங்க தோற்கடிக்கப்பட்டுஇருக்கிறரர். தமிழ் மக்களுக்கான உரிமைகளை தரமாட்டார் என கருதப்பட்ட மகிந்த ராஜபக்ச தமிழர்களின் மறைமுக ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார்.

சிறிலங்காவின் அரச தலைவராக யார் வரவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் தமிழீழ விடுதலைப்புலிகளே தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கிறார்கள் என்பதில் தற்போது பதவியேற்கவிருக்கும் மகிந்த ராஜபக்சவிற்கு கூட கருத்துவேறுபாடு இருக்காது. தற்போது மகிந்த ராஜபக்சவிடம் "நீங்கள் சனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்தையிட்டு யாருக்கு முதலில் நன்றி செலுத்துவீர்கள்" என கேட்டால் பதில் நிச்சயமாக புலிகளுக்கு என்பதாகவே இருக்கும்.

சுமார் ஒரு லட்சத்து எண்பதாயிரம் வாக்குகளை மேலதிகமாக பெற்றே மகிந்த தனது வெற்றியை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். அதேவேளை சுமார் 07 லட்சம் வாக்குகளை கொண்ட யாழ்ப்பாணத்தில் சுமார் 700 வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் தவிர இலங்கையின் வடகிழக்கு தமிழர்கள் வாழும் பகுதி எங்கும் தேர்தல் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. தமிழர்கள் வாக்களிக்கவேண்டும் என தீர்மானத்திருந்தால் ரணிலுக்கே நிச்சயம் வாக்களித்திருப்பார்கள். தமிழர்கள் தேர்தலை புறக்கணித்ததன் மூலம் கடும்போக்காளரான மகிந்த வென்றிருக்கிறார்.

தமிழர்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றை வெளிப்படையாகவே எதிர்க்கும் மகிந்த ராஜபக்சவின் தெரிவில் தமிழர் தரப்பின் "பங்களிப்பு" சரியானதா? தமிழர் தரப்பு தேர்தலை புறக்கணித்ததன் மூலம் மகிந்த ராஜபக்ச தெரிவாவதற்கான சூழ்நிலையை உருவாக்கியது சரியானதுதானா?

பிரேமதாசா அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என சொன்னபோது தமிழர்கள் அவருக்கு வாக்களித்தனர். அதற்கு பின்னர் வந்த சந்திரிகா சமாதான தேவதையாக வாக்கு கேட்டபோது தமிழர்கள் சந்திரிகாவுக்கு வாக்களித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த அனைவரும் தமிழரருக்கான தீர்வை முன்வைப்பதற்கு பதிலாக யுத்தத்தை மேற்கொண்டனர்.

அவ்வாறான சூழ்நிலையில் ரணிலை மீண்டும ஒருமுறை நம்பமுடியுமா? அல்லது தமிழர்களுக்கு அவர் தனது தீர்வுத்திட்டத்தை முன்வைத்தாரா? ரணில்விக்கிரமசிங்க தமிழர்களின் எந்த பிரதிநிதிகளுடனும் தமது கொள்கை திட்டம் தொடர்பாககோ அல்லது தமது சமாதான திட்டம் தொடர்பாகவோ எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருக்கவில்லை. விரும்பியோ விரும்பாமலோ இலங்கைத்தீவின் அசைவியக்கத்தின் ஒரு பங்குதாரர்கள் என்ற அடிப்படையில் முடிபுகளை எடுக்கும்போது விடுதலைப்புலிகளுடன் நிச்சயம் கலந்துரையாடியிருக்கவேண்டும். அவர்களுடைய கருத்துக்களை பெற்றிருக்கவேண்டும்.

தமிழர்களுக்கு நல்லவராக காட்டிக்கொண்ட ரணில் இதனை செய்யாதது தமிழர் தரப்புக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதில் வியப்பில்லை. அது மட்டுமல்லாது தமது ஆட்சி காலத்தில் விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல்களை மூழ்கடித்தவர்கள் தாங்களே எனவும் சர்வதேச பாதுகாப்பு பொறிக்குள் விடுதலைப்புலிகளை வீழ்த்திவிட்டதாகவும் மார்தட்டியபோது அதற்கான பதிலை தமிழர் தரப்பு "இப்போதைய நிலையில்" வேறு எவ்வாறு வழங்கமுடியும்?

இவற்றுக்கு அப்பால், சாதாரணமான சுனாமி நிவாரண சபைக்கான அதிகாரத்தை வழங்குவதற்கே சிறிலங்கா சட்டங்கள் தடுக்கின்றபோது தமிழருக்கான நிரந்தர தீர்வை அவை வழங்குமா என்பதும் அதற்கான தலைவரை தெரிவு செய்வதற்கு தமிழர்கள் தமது வாக்குகளை அளிக்கவேண்டுமா என்பதும் சிந்திக்கப்படவேண்டிய விடயங்களே.

4 Comments:

  • எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

    வன்னிப்பிரதேசத்தை சேர்ந்த கிளிநொச்சி வாககாளர்களுக்காக 32 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு 89454 வாக்காளர்களில் ஒரே ஒருவர் மட்டுமே சென்றார்.

    அவரை காண அனைத்து தேர்தல்பணியாளர்களும் ஆர்வத்துடன் குவிந்ததனர்.
    நன்றி - பிபிசி




    18.11.2005 அன்று 12.50 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Friday, November 18, 2005 6:08:00 PM  



  • எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

    Rajapakse will need to moderate if he seeks peace
    By M.R. Narayan Swamy

    A deeply divided Sri Lanka has chosen a known Sinhalese hardliner as its new president - but by the narrowest margin in the country's history. This itself is the first clear pointer that Mahinda Rajapakse, the current prime minister, will urgently need to shed some of his ethno-religious rhetoric and moderate himself if he wants lasting peace in his country.

    The just over 50 percent of the votes Rajapakse got to grab the presidency against great odds is primarily due to the tactical mind of Velupillai Prabhakaran. The LTTE chief decided it would be easier to deal with a brazenly Sinhalese foe than someone like Ranil Wickremesinghe, who is more acceptable to the Tamils and a Western world intent on restarting the stalled peace process.


    In contrast to Wickremesinghe, who as prime minister signed a path breaking, even if flawed, peace pact in 2002, Rajapakse feels the peace process has ended up cementing the LTTE. He is also ranged against Norway, the mediator. His fervent backers are JVP, a Sinhalese-Marxist party, and JHU, a party of Buddhist monks. Both JVP and JHU articulate the views of the Sinhalese majority in a country where Tamils, the minority, have traditionally complained of discrimination.


    All this puts him in the firing line of LTTE, which declared its opposition to Tamils taking part in Thursday's presidential election saying both Rajapakse and Wickremesinghe were two sides of the Sinhalese coin. The LTTE stand effectively killed the prospects of a Wickremesinghe victory because it ensured that Tamils in the country's north and east who may have supported him never dared to vote.


    Amid a virtual boycott by most Tamils, Rajapakse sneaked past Wickremesinghe by a wafer thin margin.


    Prabhakaran would have ensured this with only one thing in mind: a Rajapakse victory is bound to strengthen the hands of Sinhalese hardliners and in the process give oxygen to the struggle for an independent Tamil Eelam state.


    Prabhakaran, who will give his annual address Nov 27 as part of 'Heroes' Week', is unlikely to make peace with a Sinhalese-Buddhist hardliner. It is an ideology and mindset he has fought for over three decades. To push Rajapakse into an embarrassing corner, the LTTE chief will demand major concessions - if Colombo wants to restart peace talks stalled since April 2003. Wicremesinghe may have conceded Prabhakran's demands. Rajapakse will not - or cannot, at least easily - because of the JVP-JHU crutch. In the process, the LTTE will tell the world that it is Rajapakse, or the Sinhalese state, that is intransigent, not the Tigers.


    If Rajapakse, like some of his predecessors earlier, decides to backtrack, he will be dubbed a 'betrayer' by Sinhalese hardliners, now his friends. At the same time, the new president will find that with his slender majority, it will not be easy to run the country - or even win any fresh parliamentary election.


    'I am not a candidate for war, but it has to be an honourable peace,' Rajapakse said as the election results came in. That is easier said that done. If he wants to arrest the current dangerous levels of violence and bring lasting peace, the president will have to stop acting like a Sinhalese-Buddhist hardliner. If he does not, Sri Lanka will be in for troubled times.


    At a time when Prabhakaran is fuming over the European Union curbs on his group following foreign minister Lakshamn Kadirgamar's assassination, intransigence on the part of Colombo will only mean more violence and more killings - even if there is no outright war. It is going to be tough for Rajapakse.


    (The author is a Sri Lanka watcher and the author of two books on the Tamil Tigers.)



    19.11.2005 அன்று 2.53 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Saturday, November 19, 2005 7:56:00 AM  



  • எழுதிக்கொள்வது: ஈழபாரதி

    நன்றி தமிழ்வாணன் உங்கள் கட்டுரைக்கு, இதையும் பாருங்களேன்.

    பிரபாகரன் அவர்களின் தந்திரோபாயமான சிந்தனையால் வெற்றிபெற்ற மகிந்தர். சொல்கிறார் எம். ஆர். நாராயண் சுவாமி.

    ஆழமாகப் பிளவுபட்ட சிறிலங்காவானது தனது வரலாற்றிலேயே ஆகக் குறைந்தளவு பெரும்பான்மையுடன் சிங்களக் கடும்போக்காளராக அறியப்பட்ட ஒருவரைச் சனாதிபதியாகத் தெரிவுசெய்துள்ளது. இந்த ஒன்றே -'ராஜபக்ச சமாதானத்தை விரும்புவாராயின்- தனது இன- மதவாதப் பேச்சுகளைச் சற்றுக் குறைத்து ஒரு மிதவாதியாகத் தம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்' என்பதற்கான முதன்மையான, தெளிவான அறிகுறியாக உள்ளது.

    வேலுப்பிள்ளை பிரபாகரனின் தந்திரோபாயமான சிந்தனையால்தான் (Tactical mind), சிறிய பெரும்பான்மையான 50 வீதத்திற்கும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்று சனாதிபதிப் பதவியை ராஜபக்ச பெற்றுக்கொண்டிருக்கிறார். தடைப்பட்டுள்ள சமாதானப் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பதில் ஆர்வம் கொண்டுள்ள மேற்குலகினாலும், தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ரணில் விக்கிரமசிங்கவைக் கையாள்வதைக்காட்டிலும், 'வெட்கங்கெட்ட சிங்கள எதிரியை'க் (Brazenly Sinhalese foe) கையாள்வது இலகுவானது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தீர்மானித்துவிட்டார்.

    குறைபாடுகள் உள்ளபோதிலும் தடைகளைத் தகர்த்த -2002 ஆம் ஆண்டின் சமாதான ஒப்பந்தத்தை மேற்கொண்ட- முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவின் கருத்திற்கு நேரெதிராக, இந்தச் சமாதான நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளைப் பலப்படுத்துவதிலேயே வந்து முடிந்திருப்பதாக ராஜபக்ச உணருகிறார். அதேவேளை அவர் அனுசரணையாளரான நோர்வேக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுத்திருக்கிறார்.

    ஜே.வி.பி எனப்படும் சிங்கள- மாக்ஸியக் கட்சியினரும், ஜாதிக ஹெல உறுமய எனப்படும் பௌத்த பிக்குகளின் கட்சியினருமே ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்கள். இந்த ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய இரண்டுமே, சிங்களப் பெரும்பான்மையினரின் கண்ணோட்டத்தையே பிரதிபலிக்கின்றன. சிறிலங்காவின் சிறுபான்மைத் தமிழர்கள் பாரம்பரியமாகவே பாரபட்சத்திற்குத் தாம் உள்ளாகிவருவதாக முறையிட்டு வருகின்றனர்.

    இவை அனைத்தும் ராஜபக்ச, விக்கிரமசிங்க இருவருமே சிங்கள நாணயத்தின் இரண்டு பக்கங்கள். எனவே 'சனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் அக்கறை கொள்ளத் தேவையில்லை' என்று பிரகடனம் செய்த விடுதலைப் புலிகளது இலக்கிற்குள் ராஜபக்சவைத் தள்ளியுள்ளன.

    வாக்களித்தால் ரணிலுக்கே ஆதரவளிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிறிலங்காவின் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பதை உறுதிப்படுத்திய விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதியாகக் கொன்றொழித்துவிட்டது.

    அனேக தமிழர்களின் உண்மையான -காரணகாரியத்துடன் கூடிய- புறக்கணிப்பிற்கு மத்தியில், ராஜபக்ச மிகவும் குறைவான வித்தியாசத்தில் ரணிலை முந்தியிருக்கிறார்.

    பிரபாகரன் ஒன்றே ஒன்றை மட்டும் தமது மனதில் கொண்டே இந்த நிலையை உறுதிப்படுத்தியிருக்கக்கூடும்: அதாவது ராஜபக்சவின் வெற்றியானது சிங்களக் கடும்போக்காளரின் கரங்களைப் பலப்படுத்தும் அதேவேளை இந்த நடைமுறை யாதார்த்தமானது சுதந்திர தமிழீழ தேசத்திற்கான போராட்டத்திற்கு உரமளிக்கும்.

    கார்த்திகை 27ம் திகதி மாவீரர் வாரத்தின் ஒரு அங்கமாக அமையும் தமது வருடாந்த மாவீரர் தின உரையை ஆற்றவுள்ள பிரபாகரனால், சிங்கள-பௌத்த கடும்போக்காளருடன் சேர்ந்து சமாதானத்தைக் கொண்டுவருவது என்பது சாத்தியமில்லை. இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அவர் போராடிவருகிறார்.

    ஏப்ரல் 2003 இலிருந்து தடைப்பட்டுப்போயுள்ள சமாதான நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கக் கொழும்பு விரும்புமாயின் முக்கிய உரிமைகளைத் தமக்குத் தருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வலியுறுத்துவார். இது ராஜபக்சவைத் தர்மசங்கடமான ஒரு நிலைப்பாட்டிற்குள் தள்ளிவிடும்.

    விக்கிரமசிங்க பிரபாகரனின் கோரிக்கைகளுக்கு இணங்கக்கூடும். ஆனால் ராஜபக்ச அவ்வாறு இணங்க மாட்டார் அல்லது இணங்க முடியாது. ஏனெனில் ஜே.வி.பி-ஹெல உறுமயவின் கிடுக்கிப்பிடி அதனைச் செய்ய அவரை அனுமதிக்காது. இவ்வாறு நடந்துவரும்போது 'சமாதானத்திற்கு இணங்காதிருப்பது ராஜபக்சவோ அல்லது சிங்கள தேசமோ அன்றி விடுதலைப் புலிகள் அல்ல' என்று புலிகள் உலகத்திற்குச் சொல்வார்கள்.

    ராஜபக்ச தமக்கு முன் ஆட்சியிலிருந்த சிலரைப்போலத் தனது கடும்போக்கிலிருந்து பின்வாங்க முற்பட்டால், தற்போது நண்பர்களாக உள்ள சிங்களக் கடும்போக்காளர்களால் 'துரோகியாகக்' கருதப்படுவார். அதேவேளை, புதிய சனாதிபதி தனது மிகச் சிறிய பெரும்பான்மையை வைத்துக்கொண்டு நாட்டை நிருவாகம் செய்வதோ அல்லது புதிதாக நடக்கக்கூடிய பாராளுமன்றத் தேர்தல்களில் வெல்வதோ இலகுவானதல்ல என்பதையும் புரிந்துகொள்வார்.

    'நான் போருக்கான வேட்பாளர் அல்ல, ஆனால் சமாதானம் என்பது கௌரவமான சமாதானமாக இருக்கவேண்டும்' என்று தேர்தல் முடிவுகள் வெளியானதும் குறிப்பிட்டார் ராஜபக்ச.

    அப்படிச் சொல்வது அதனைச் செய்வதைக் காட்டிலும் இலகுவானது.

    தற்போதைய -அபாய கட்டத்தை அடைந்துள்ள -மோதல்களைத் தடுக்கவும், நிலைத்துநிற்கக்கூடிய சமாதானத்தைக் கொண்டுவரவும் சனாதிபதி விரும்பினால், சிங்கள -பௌத்த கடும்போக்காளராகச் செயற்படுவதை அவர் நிறுத்தவேண்டும். அவரால் அது முடியாதெனில் சிறிலங்கா ஒரு குழப்பகரமான நிலமைகளை எதிர்கொள்ளவேண்டியதுதான்.

    வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரின் கொலையினை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் தமது அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடை குறித்துப் பிரபாகரன் கடும் சினமடைந்திருக்கும் இந்த வேளையில், சமாதானத்திற்கு இணங்காத கொழும்பின் நிலைப்பாடானது -ஒரு உடனடியான யுத்தத்தைக் கொண்டுவராவிடினும்- மேலும் குழப்பங்களையும் உயிர்ப்பலிகளையுமே விளைவிக்கும்.

    (இந்தக் கட்டுரையாளர் சிறிலங்காவின் நிலமைகளை அவதானித்து வருபவர். தமிழ்ப் புலிகள் குறித்த இரண்டு புத்தகங்களின் ஆசிரியர்)

    நன்றி: Rajapakse will need to moderate if he seeks peace By M.R. Narayan Swamy

    தமிழில்: திருமகள் (ரஷ்யா)

    19.11.2005 அன்று 12.13 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Saturday, November 19, 2005 5:15:00 PM  



  • எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

    வணக்கம் ஈழபாரதி உங்கள் இணைப்புக்கு நன்றி.

    மேற்படி ஆக்கத்தில்
    //ரணில் விக்கிரமசிங்கவைக் கையாள்வதைக்காட்டிலும், 'வெட்கங்கெட்ட சிங்கள எதிரியை'க் (Brazenly Sinhalese foe) கையாள்வது இலகுவானது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தீர்மானித்துவிட்டார். //

    என்ற பகுதியில் "வெட்கங்கெட்ட சிங்கள எதிரி" என தமிழாக்கம் கொடுத்திருப்பது தவறுதலானதாகும். வெளிப்படையான எதிரி என்பது பொருத்தமானதாக இருக்கும். இத்தமிழாக்க கட்டுரையாசிரியர் தொடர்ந்து தமிழாக்கம் செய்துவருபவர். அதனை பாராட்டும் அதேவேளை இவ்வாறான நாகரிகமற்ற சொற்பிரயோகங்களை தவிர்த்துக்கொள்வது நல்லது என கருதுகிறேன்.

    20.11.2005 அன்று 11.12 (UTC)மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Sunday, November 20, 2005 4:25:00 PM  



Post a Comment

<< Home