|
அம்மாவென்று அழைக்காத......
|
இது ஓர் அம்மாவைப் பற்றி சொல்லும் பாடல்: சிறிது நேரத்தில் பாடல் ஆரம்பமாகும். அப்படியில்லாவிட்டால் கீழுள்ள முகவரியில் சென்றும் தரவிறக்கிகொள்ளலாம்.
இங்கே சென்று தரவிறக்கி கொள்ளுங்கள். http://download.35mb.com/thamilvanan/amma.mp3
இன்று ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம். மே - 8 ம்திகதி உலகெங்கும் உள்ள அன்னையர்களை கௌரவிக்கும் நாளாக மறைந்துபோன அன்னையரை நினைவு கொள்ளும் தினமாக கொண்டாடப்பட இருக்கிறது. அமெரிக்காவில் 1908 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக முதன்முதலாக பிரகடனப்படுத்தப்பட்டு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
(நான் அறிந்த தகவலின்படி) ஒவ்வொரு ஆண்டின் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் Mothers's Day கொண்டாடப்படுகிறது.
ஒளிகொடுத்த சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாம் பால் கொடுக்கும் பசுவுக்கு நன்றி செலுத்தும் நாம் பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்த தாய்க்கு நன்றி செலுத்துகிறோமா?
இன்று வெளிநாடுகளில் பலர் தமது தாய் தந்தையரை மூதாளர் காப்பகங்களில் சேர்த்துவிடுவதை காணக்கூடியதாக இருக்கிறது. பாசம் என்ற பிணைப்பில் நிலைநிறுத்தப்படும் சமுதாயம் அதனையே சமூகத்தின் ஆணிவேராக கொண்ட சமுதாயம் ஏன் இப்படி மாறிக்கொண்டிருக்கிறது?
இன்று தனது அம்மம்மாவை மூதாளர் விடுதியில் காணும் இன்றைய சிறுவர்கள் நாளைய அம்மம்மாவை என்ன செய்யபோகிறார்கள்?
பிகு 1: மே எட்டாம் திகதி அன்று உங்கள் அன்னைக்கு அன்பு பரிசளித்து அவளை பரவசப்படுத்துங்கள்.
|
|
|
|