|
கருத்து சொல்ல வாங்க.
|
திருவள்ளுவர் தமிழ் எழுதிக்கான இறுதி வேலைகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டன. முழுநிறைவான தமிழ் உள்ளீட்டு செயலியை சாதாரண இணையப்பாவனைக்கு ஏற்றவகையிலே வடிவமைப்பதே நோக்கமாக இருந்தது.
வெளிவரும் இவ்வெழுதியில் நீங்கள் விரும்பியவாறு விரும்பிய இடங்களில் கிளிக்செய்து தட்டெழுதமுடியும்.
இதுவரை காலமும் இரண்டு கருத்துபெட்டிகள் பாவித்ததில் இருந்து தனிப்பெட்டிக்கு மாறுவதுடன். தட்டெழுதும்போதே ஆங்கில எழுத்துருக்கள் தோன்றாது தட்டெழுத முடியும்.
நான் எற்கனவே புதிய எழுத்துரு சம்பந்தமாக குறிப்பிட்டிருந்தேன். ஆங்கில ரோமன் ஸ்கிரிப்ரில் தட்டெழுதுபவர்கள் புதிய எழுத்துரு தேவையற்றது என கருதுவதால் தற்போது பாமினி எழுத்துரு பயன்படுத்துபவர்கள் இலகுவாக மாறிக்கொள்ளகூடிய விதத்தில் புதிய எழுத்துரு வடிவமைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான கருத்துகளை ஆர்வமுள்ளவர்கள் முன்வைக்கலாம்.
இக்கருத்தூட்ட செயலியை உங்கள் இணையப்பக்கத்தில் இணைத்துக்கொள்ள விரும்பினால் இமெயிலில் தொடர்புகொண்டால் உங்களுக்கு ஏற்றவாறு மீயுரை அனுப்பிவைக்கப்படும். சிலர் தமது கருத்து பெட்டியை பிரதான பக்கத்தில் தோன்ற செய்யவிரும்புகிறார்கள். சிலர் பொப் அப் விண்டோவில் அதனை தனியாக உருவாக்க விரும்புவார்கள். உங்கள் விருப்பத்தை குறிப்பிடுங்கள்.
கருத்துக்கள் பகுதியை கிளிக் செய்து கருத்தூட்ட பெட்டியை பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
அன்புடன் தமிழ்வாணன்.
பி.கு : ரிஸ்கி எழுத்துருவுக்கு மட்டும் தட்டெழுதிய வசனத்தின் இடையில் தட்டெழுதமுடியாது. இது எதிர்காலத்தில் தொடரும் பதிப்புகளில் நிவர்த்தி செய்யப்படலாம்.
|
|
|
|