<BODY><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9107255\x26blogName\x3d%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thamilsangamam.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thamilsangamam.blogspot.com/\x26vt\x3d-4696126665130882971', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
   
எதிரொலி
எதிரொளி
முன்னைய பதிவுகள்
தொகுப்பு
உங்கள் வரவுகள்

To see all visitor details
நன்றிகள்

Powered by Blogger
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
»--------»

நான் பிறந்த ஊர்
ஒரு ஓரமாய் அமைந்திருந்த
என்னூரைப்பற்றி
இப்போதும் பச்சையாய் ஞாபகங்கள்
எட்டு வயது மட்டுமே பழக்கம்
அதன்பின் ஐந்தோடு பத்தாக
அலைந்தோம் ஒவ்வொன்றாய்
தொலைந்தோம்.

சின்னவயதில்
சிறகடித்த எம்மூரில்
செல்லாக்காசாய்
ஓடிச்செல் என வானிருந்து
கட்டளை
துண்டுகள்சொல்லியது.

ஆனைக்கொய்யாவும்
கறுத்தகொழும்பான் மாம்பழமும்
இப்போதும் என்வீட்டில் இருப்பதாய்
இப்போதும் உணர்கிறேன்.
எல்லையில் இருந்திருந்தால்
இப்போது எதிர்பார்க்கலாம்
இப்படித்தான் நடக்கும் என்று.
ஆனால்
எங்களுர் இரண்டிற்கு
இடையிலே இருந்ததால் தான்
எல்லாமே நடந்தது.

முரளி பழம் இவ்வூரின் முகவரி
5 வருடத்துக்கு ஒருமுறைதான்
பூக்கும் காய்க்கும்.
அப்போதும் அப்படித்தான்
பூத்து புல்லரித்து
எல்லாமே ஒருநொடியில்
எங்களுக்கு மட்டும்
ஏன் இப்படி?

தமிழர்கள் என்பதாலா?

3 Comments:

  • எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

    எந்த ஊர் என சொல்லவில்லை. ஆனால் கண்டுகொள்வீர்கள் என நினைக்கிறேன்.



    1.19 மணிக்கு 18.3.2005அன்று பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Thursday, March 17, 2005 7:20:00 PM  



  • எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்.

    இப்படித்தான் சில பழைய ஞாபகங்கள் இடைக்கிடை வந்து பெருமூச்சை தந்துவிட்டு போகும்.



    1.21 மணிக்கு 18.3.2005அன்று பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Thursday, March 17, 2005 7:23:00 PM  



  • எழுதிக்கொள்வது: P.V.Sri Rangan

    அன்பின் சிறிரங்கன்
    நீங்கள் போரால் ஏற்பட்ட பாதிப்புகளின் தாக்கம் உங்களை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. நீங்கள் ஓரு தடவை எனது பதிவில் பின்னூட்டம் இட்டபோது நீங்கள் கூற வந்ததை புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆனால் இப்போது தான் நீங்கள் என்ன கண்ணோட்டத்தில் அதனை கூறினீர்கள் என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.

    தற்போது நடந்து கொண்டிருக்கின்ற ஈழவிடுதலைப்போராட்டத்தால் உங்களைப்போல பலர் இருக்கிறார்கள். ஆனால் போராட்டத்தில் ஒரு சில தவறுகளே உங்களை இந்நிலைக்கு கொண்டுவந்திருக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் நாம் இப்போது 2000 ஆண்டுகளுக்கு முன்னைய நிலையில வாழ்ந்து கொண்டிருக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அண்ணனுக்கு பக்கத்து வீட்டுக்காரன் அடித்துவிட்டான் என்பதற்காக பக்கத்துவீட்டுக்காரர்கள் அனைவரும் எதிரிகள் எனவும் வெட்டுக்கொத்துக்கு செல்லவேண்டும் என நினைப்பது இப்போது எவ்வளவு முட்டாள்தனம் எனபதை புரிந்துகொள்வீர்கள். போராட்டத்தின் அடி நேற்று இன்று தோன்றியது அல்ல. அன்றைய பழைய தலைவர்கள் சரியென்று கருதியதற்கு தான் அன்றைய இளைஞர்கள் செயல்வடிவம் கொடுத்தார்களே ஒழிய ஒரு தனிமனித தீர்மானம் அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்.

    நீங்கள் முரண்படுவது எங்கே என்பது ஓரளவுக்கு புரிந்துகொள்ளமுடிகிறது. அழிவுகளையும் இழப்புகளையும் கண்ட எதிரொலிப்பு அது. தமிழர்கள் என்ற வகையில் எங்களுக்கு இலங்கையில் உரிமைகள் மறுக்கப்பட்டபோதுதான் போர் தொடங்கியது. எந்த ஒரு சமூகத்துக்கு விடுதலை வேண்டும் என விரும்புகிறோமோ அவர்கள் போராடித்தான் ஆகவேண்டும். சுதந்திர வல்லரசான அமெரிக்கா இன்றும் ஏன் போராடிக்கொண்டிருக்கிறது. அவர்களுடைய நிலைப்பாட்டின்படி சரியான தொரு முடிவு கிடைக்கவேண்டுமானால் போராடித்தான் ஆகவேண்டும். இது உலக நியதி.

    தமிழர்கள் என்ற வகையில் தமிழர்கள் விரும்புவது எதுவோ அதனை பெற்றே ஆகவேண்டும். அதற்கான வழிமுறைகள் என்ன ? இப்போது செய்வது சரியா பிழையா ? என்நால் பல கருத்துகள் வருவது இயல்பானதுதான். ஆனால் எப்படியோ தமிழர்கள் இன்று தலை நிமிர்ந்து வாழவைத்தது விடுதலைப்போராட்டமே என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

    இன்று சமஸ்டி தீர்வுக்கு சிறிலங்கா அரசை வரச்செய்த பெருமை இந்த போராட்டத்தால் வந்த விளைவு என்பதை டக்ளஸ் கூட ஏற்றுக்கொண்டிருந்தார் என்பதை ஞாபகம் ஊட்டவிளைகிறேன்.

    ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளவேண்டும் என விரும்புகிறேன். உண்மை என்பதற்கு முன்னால் நடுநலைமை என்பது இல்லை.

    --
    Posted by தமிழ்ச்சங்கமம் to The point:social steady is the sociality. at 3/19/2005 04:00:52 AM



    அன்புடைய திரு.ஈழநாதன் அவர்கட்கு,வணக்கம்!
    நலம்,நலம்தாமே? தங்களின் நேசம் நிறைந்த மடல் கிடைக்கப்பெற்று யாவும் வாசித்தறிந்தேன்,மகிழ்ச்சி! அன்போடரவணைக்கும் தங்கள் மடல் என் உச்சிமோந்து செல்கிறபோது அந்த நேசத்தை நம் கருத்துகள் சிதைப்பதை நான்(நாம்)அனுமதியே(hம்)ன்.கருத்துக்களுக்குக் கொடுக்கும் மதிப்பைவிட மனிதவுணர்வுகளுக்கு மதிப்பளிப்பதே காணாதுபோன மனிதாயத்தை மீட்டெடுக்க ஒரே வழி.இந்நோக்கோடுதாம் நாம் காலம் பூராக வாழவும்-சாகவும் விரும்புகிறோம்.ஈழ விடுதலையையும்,எங்கள் தேசபக்த இளைஞர்களையும் நாம் எந்தப்பொழுதிலும் கேவலப்படுத்தவோ-தூசிக்கவோயில்லை.களத்தில் மடியும் ஒவ்வொருவுயிரும் மகத்தான ஆன்மா.அந்த அற்புத ஜீவன்களை நான் துவேசித்தால் எனக்கு தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்குமா?ஆனால் அத்தகைய அற்புத மனிதர்களின் அளப்பெரிய தியாகம் தமிழ்த் தரகு முதலாளியத்தின் நலன் சார்ந்து உபயோகிக்கப்படுகிறது,அற்ப சலுகைளால் அவர்தியாகம் கொச்சைப்பட முடியாது.இலட்சக்கணக்கான நம் மக்களின் சாவு அன்னியர்களின் நலனுக்குக் கருவியாக முடியாது.புலிப்போராளிகளையும்-தலைமைமட்டத்தையும் ஒரேமட்டத்தில் வைத்து நாம் நோக்கவில்லை.ஒவ்வொரு போராளிகளையும் என் குழந்தைகளாகவும்-உடன்பிறந்த சகோதரர்களாகவுமே நாம் உணர்கிறோம்!இது வார்த்தைகளால் சொல்ல முடியாத அற்புதமான உணர்வு.இருந்தும் தமிழர்கள் மத்தியில் புதிதாய்த் தோற்றம் பெற்றுவிட்ட தரகு முதலாளியம் நம் போராட்டத்திசையைத் திருப்பிவிட்டுள்ளது.அது ஜனநாயகப் படுகொலையைச்செய்கிறது.மக்களின் உயிரை துரோகியின்று பறிக்கிறது.இது வருந்தத்தக்கது.தமிழர் தம் வாழ்வையும் வளத்தையும் அது திமிர்த்தனமாகப் பறிப்பதால் அதற்கொரு பாரிய வாழ்வு வரப்போவதில்லை.இன்றைய ஏகாதிபத்திய-பல்தேசக்கம்பனிகள் அந்த நிலையையேற்படுத்திவிட்டது.இலங்கையில் அமைதியான சூழலை ஏற்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒருபோதும் விருப்புவதில்லை.அது அவர்தம் அரசியல் இலாபத்தோடு சம்பத்தப்பட்ட விஷயம்.

    நீங்கள் குறித்த விடையங்கள் மிகவும் பெறுமதி வாய்ததாக நாம் உணர்கிறோம்.திரு.வே.பரபாகரன் அவர்கள் தமிழ்பேசும் மக்களீன் ஒரு குறியீடாகியுள்ளார்கள் அதனால் அவா குறித்த விமர்சனம் அவரைக்குறித்து நிற்பதில்லை என்பதும்,அது தமிழ்த்தரமுதலாளிய ஆளும்வர்க்க அரசியல் அபிலாசை குறித்த வமர்சனமாகவும் விரியும். எமது தன்மானத்தைக் காப்பாற்றிய எத்தனையோ போராளிகள் இன்று நம்மத்தியிலில்லை.அவர்தம் தியாகவேள்வி ஒருசில பணக்காரரின் நலனுக்காகப் பயன்படுதலை நாம் வன்மையாக எதிர்க்கிறோம்!எந்த ஆதாயமுமின்றித் தன் இனத்தின் துயர்துடைக்பலியான அந்தத் தேசபக்தர்களை இவர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்கிறோம்.அரஜகமான அரசியலுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இயங்கில் விதிப்படி தேசநிர்மாணத்தின் கனவில் கருக்கொண்டதல்ல.அவாகள் தேசத்திற்காய் மக்களோடு மக்களாய் போராடி மாண்டனர்.ஆனால் அரச ஆதிக்கம் என்பது பொருளாதார நலத்தின் தவிர்க்க முடியாத வடிவம்.அது தனது நலன்களை மையப்படுத்திய அரசியல்-யுத்தம் எல்லாம் செய்யும்.இதை இனம்காணுவதே எமது இன்றைய தேவை. இதன் மூலம் ஒரு ஜனநாயபூர்வ அமைப்பாண்மை மிக்க சமுதாயத்தைதஇ தோற்றுவிப்பதும் நமது இறைமையினால் மற்றையவர்கள் பாதிப்புறாத மேன்மையான அரசியலை முன்னெடுத்து நமது நியயாயமான உரிமையை வென்றெடுப்பதும்தாம் நம் முன்னுள்ளவேலை. இது உயிரிடத்தில் மதிப்பும் மரியாதையும் கொண்ட ஒரு ஆரோக்கியமான அரிசியலால் மட்டுமே சாத்தியம்.எவ்வளவுதாம் கருத்து முரண்பாடுருவாகினும் நாம் மனித விழுமியத்தைக்காப்போம்! மனிதாபிமானமற்றவொரு உலகைக் கற்பனை செய்யக்கூட முடியவில்லை.அன்பே உலகை ஆளவும் அரவணைக்கவும் முதலாளிய உற்பத்தி இடமளிப்பதில்லை.அதுபேசும் மனிதாபிமானம் வர்க்கம் சார்ந்தது.ஆனால் நாமுணரும் மனிதாபிமானம் நம் ஆத்மீகப்பலத்தோடுருவான மனிதாயம் அது மக்களிடத்தில் அன்கொண்டு 'யாதும் ஊரே யாவரும் கேளீர்'என்று அழியா வரம் பெற்ற உணர்வு.

    மீண்டும் இவ்வளவு நேசமிக்க புரிதுணர்வுமிக்க ஒரு மடலை எம் கால்நூற்றாண்டு அரசியல்-இலக்கிய வாழ்வில் நாம் காணவேயில்லை.அதிகம்போனம் வசவு வரும்,இல்லையேல் பொட்டா பிறையா வேண்டுமென வரும்.உங்கள் அன்புமிக்க இதயத்தை நான் சிதைத்துவிட்டால் அதற்காக உங்கள் கரத்தைப் பிடித்து என்னை மன்னிக்கும் படி கேட்கின்றேன்.

    'உலகெல்லாம் அன்பும்,மானிடநேயமும் மலர வைக்கும் அந்த அழகிய வர்க்கபேதமற்ற உலகைக் கட்டியமைப்போம்',மானிடரைநேசிக்கும் மகத்தான பண்பை நம் மழலைகளுக்குக் கற்றுக் கொடுப்போமெனக் கூறீ விடைபெறும்:

    தங்களன்புமறவாத
    ப.வி.ஸ்ரீரங்கன்













    20.25 மணிக்கு 19.3.2005அன்று பதிவுசெய்யப்பட்டது.

    By Anonymous Anonymous, at Sunday, March 20, 2005 12:21:00 AM  



Post a Comment

<< Home